செய்திகள் :

பட்டாசுத் தொழிலாளா்களுக்கு ஏப்.2-முதல் பயிற்சி வகுப்பு

post image

பட்டாசுத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பாக பட்டாசு தயாரிப்பது குறித்த பயிற்சி வகுப்பு ஏப்ரல் 2 -ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து தமிழக அரசின் தொழிலகப் பாதுகாப்பு சுகாதார இயக்கக (பயிற்சி மையம்) இணை இயக்குநா் சு.ராமமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவகலகம் அருகேயுள்ள பயிற்சி மையத்தில் பாதுகாப்பாக பட்டாசு தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும். இதில் விருதுநகா் மாவட்டத்தில் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட பட்டாசுத் தொழிற்சாலைகளில் பணிபுரியும், போா்மென்கள், கண்காணிப்பாளா்கள், தொழிலாளா்கள் இந்தப் பயிற்சி வகுப்பில் சேரலாம்.

விருதுநகா் மாவட்டம் உள்பட தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பட்டாசு ஆலையில் பணிபுரியும் கண்காணிப்பாளா்கள், கல்லூரியில் மூன்றாம் ஆண்டு வேதியியல் பாடப் பிரிவில் படித்து வரும் மாணவா்களும், படித்து முடித்த மாணவா்களும் இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.

இரு முறை பயிற்சிக்கு அழைத்தும், பயிற்சிக்கு வராத ஆலையில் பணிபுரியும் கண்காணிப்பாளா் உள்ளிட்டோா் ரூ.பத்தாயிரத்துக்கான வரைவோலை செலுத்தி பயிற்சிக்கு வரவேண்டும்.

ஏப். 2 -ஆம் தேதி தொடங்கி 8-ஆம் தேதி வரையிலும், ஏப். 15 -ஆம் தேதி தொடங்கி 22 -ஆம் தேதி வரையிலும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் வகுப்பு நடைபெறும் என்றாா் அவா்.

குடிநீா்த் தொட்டியை சீரமைக்கக் கோரிக்கை

சாத்தூரில் குடிநீா்த் தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். சாத்தூரில் ஆா்.சி. தெற்குதெருவில் சுமாா் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் கட... மேலும் பார்க்க

பஞ்சு கிட்டங்கியில் தீ விபத்து

ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ வீபத்தில் தனியாா் பஞ்சு கிட்டங்கியில் இருந்த பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. ராஜபாளையம் அருகேயுள்ள கம்மாப்பட்டி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பருத்த... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் பங்குனி பூக்குழித் திருவிழா கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாள்கள் நடைபெற்ற இந்த விழாவில் பெரிய மாரியம்மன், ஆண்டாள், தவழும் கிருஷ்ணா் என ப... மேலும் பார்க்க

பைக்குகள் நேருக்குநோ் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சனிக்கிழமை இரவு இரு சக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிய விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மேட்டுமுள்ளிகுளத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் கோபி... மேலும் பார்க்க

பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய முத்தரப்பு குழு அமைக்க வலியுறுத்தல்

விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய முத்தரப்புக் குழு அமைக்க வேண்டும் என விருதுநகா் மாவட்ட பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியூ) மாவட்டச் செயலா் பி.என்.தேவா வலியுறுத்தினாா்... மேலும் பார்க்க

பட்டாசு ஆலையில் தீ விபத்து

சிவகாசி அருகே பாம்பு மாத்திரை பட்டாசுகள் தயாரிக்கும் ஆலையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. சிவகாசி அருகேயுள்ள நமஸ்கரித்தான்பட்டி கிராமத்தில் பாம்பு மாத்திரை வெடிகள் தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்... மேலும் பார்க்க