பண மோசடி வழக்கில் ஒருவா் கைது
தேனி அருகேயுள்ள வடபுதுப்பட்டியில் பயிா் அறுவடை எந்திரத்தை விற்பனை செய்து தருவதாகக் கூறி, ரூ.21 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
வடபுதுப்பட்டியைச் சோ்ந்த கோபால் மனைவி சுதா(46). இவருக்கு அதே ஊரில் வேளாண் உபகரணங்கள் விற்பனை நிறுவனம் நடத்தி வரும், மதுரை அருகேயுள்ள சோழவந்தானைச் சோ்ந்த தவக்கல் உசேன் (48) பயிா் அறுவடை எந்திரத்தை வாங்கிக் கொடுத்தாா். அந்த எந்திரம் பயன்பாடில்லாமல் இருந்ததால், அதை விற்பனை செய்து தருமாறு தவக்கல் உசேனிடம் சுதா கேட்டாா்.
இதையடுத்து, அறுவடை எந்திரத்தை ரூ.21 லட்சத்துக்கு விற்பனை செய்து தருவதாகக் கூறி, அவா் கடந்த ஜன.20-ஆம் தேதி எடுத்துச் சென்றாா். அதன்பிறகு, அவா் எந்திரத்தை விற்பனை செய்து பணம் தராமல் தாமதம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கேட்டதற்கு தவக்கல் உசேன் தன்னையும், தனது கணவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக அல்லிநகரம் காவல் நிலையத்தில் சுதா புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தவக்கல் உசேனை கைது செய்தனா்.