செய்திகள் :

பண மோசடி வழக்கு; ராபர்ட் வதேராவிற்கு அமலாக்கப் பிரிவு மீண்டும் சம்மன்!

post image

காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா கடந்த 2008ம் ஆண்டு ஹரியானா மாநிலம், குருகிராம் அருகில் உள்ள சிகோபூர் என்ற இடத்தில் 3.5 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினார். அந்த நிலத்தை ராபர்ட் வதேரா ரூ.58 கோடிக்கு டி.எல்.எஃப் நிறுவனத்திற்கு விற்பனை செய்துவிட்டார். இதில் ராபர்ட் வதேரா தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி அதிக விலைக்கு நிலத்தை விற்றதாகவும், டி.எல்.எஃப் நிறுவனத்திடமிருந்து சொத்துகளை வாங்க அதிக அளவில் சலுகை எதிர்பார்த்ததாகவும் 2011ம் ஆண்டு அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி இருந்தார். ஹரியானாவில் நிலம் வாங்கி விற்பனை செய்யப்பட்டதில் பணமோசடி நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு விசாரித்து வருகிறது.

அமலாக்கப் பிரிவு இதற்காக ஏற்கனவே கடந்த 8ம் தேதி ராபர்ட் வதேராவிற்கு ஒரு முறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அந்த சம்மனுக்கு ராபர்ட் வதேரா ஆஜராகவில்லை. இதையடுத்து இப்போது இரண்டாவது முறையாக அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பி இருக்கிறது. முதல் முறை ஆஜராகாத காரணத்தால் இப்போது கட்டாயம் ஆஜராக வேண்டிய கட்டாயத்தில் ராபர்ட் வதேரா இருக்கிறார். அமலாக்கப் பிரிவின் இந்த நோட்டீஸை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார். ஹரியானாவில் சட்டவிரோத நில வர்த்தகம் தொடர்பாக முன்னாள் முதல்வர் புபிந்தர் ஹோடா, ராபர்ட் வதேரா போன்றவர்கள் ஈடுபட்டதாக சி.பி.ஐ யும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது. சட்டவிரோத நில வர்த்தகம் மூலம் ராபர்ட் வதேரா ரூ.50 கோடி அளவுக்கு ஆதாயம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மற்றொரு பணமோசடி வழக்கில் ராபர்ட் வதேரா ஒரு முறை அமலாக்கப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

`சொத்து குவிப்பு வழக்கில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் விடுவிப்பும் ரத்து' - உயர் நீதிமன்றம் அதிரடி

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.கடந்த 1996 ... மேலும் பார்க்க

`துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசும் காவல்துறையும் மிரட்டியுள்ளது’ - குற்றச்சாட்டும் ஆளுநர் ரவி

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஊட்டி ராஜ்பவனில் துணை வேந்தர்களுக்கான மாநாடு நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் நடைபெறும் 2 நாள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் ... மேலும் பார்க்க

'பஹல்காமில் எப்படி பாதுகாப்பு குறைபாடானது?' - அனைத்து கட்சி கூட்டத்தில் தலைவர்கள் பேசியதென்ன?

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக ஆலோசிக்க நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.'அனைவரும் ஒப்புக்கொண்டனர்' - கிரண் ரிஜிஜு இந்த ஆலோசனை கூட்டம் தொடர்பாக பாஜக-வின் கிரண் ரிஜிஜூ செய்தியாளர்களிடம்... மேலும் பார்க்க

'எனக்கு பிடிக்கவில்லை; நிறுத்துங்கள்' - புதின் மீது கோபப்படும் ட்ரம்ப் - பின்னணி என்ன?

ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நீ......ண்டுகொண்டே போகின்றது. ரஷ்யா, உக்ரைன் இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தையில் பிடி கொடுக்க மறுக்கிறது. 'நாங்கள் மத்தியஸ்த்தில் இருந்து விலகிவிடுவோம்' ... மேலும் பார்க்க

Pahalgam : 'இந்தியாவாக இருந்தாலும், இஸ்ரேலாக இருந்தாலும்..!' - நியூயார்க் டைம்ஸை சாடிய அமெரிக்க அரசு

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் இந்திய அளவில் மட்டுமல்ல... உலக அரங்கிலும் மிகவும் அதிர்ச்சி அளித்த விஷயம். அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல், இலங்கை என உலகின் பெரும்பாலான நாடுகளிடம் இருந்து இந்தியாவுக்கு ... மேலும் பார்க்க