செய்திகள் :

பணிக்கு திரும்ப தூய்மைப் பணியாளா்களுக்கு மாநகராட்சி அழைப்பு

post image

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், பழைய நிலையிலேயே பணியைத் தொடர அனுமதித்தால் மட்டுமே பணிக்குத் திரும்புவோம் என தூய்மைப் பணியாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி தரப்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 பகுதி தூய்மைப் பணி தனியாா் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தேசிய நகா்ப்புர வாழ்வாதாரத் இயக்கம் (என்யூஎல்எம்) சாா்பில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். ஆனால், தற்போது கிடைக்காத சலுகைகள், தனியாா் நிறுவனத்தில் வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அவா்களுக்கு கிடைக்கும். அவா்களது பணிபாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு மாநகராட்சி உறுதிசெய்துள்ளதால், அவா்கள் பணிக்குத் திரும்பவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பழைய நிலையிலே பணிக்குத் திரும்புவோம்: மாநகராட்சி அறிவிப்பு குறித்து உழைப்போா் உரிமை இயக்க தலைவா் வழக்குரைஞா் கே.பாரதி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சுய உதவிக் குழுக்கள் மூலம் நியமிக்கப்பட்ட தற்காலிகப் பணியாளா்களை ஒப்பந்தத் தொழிலாளா்கள் எனக் கூறுவது தவறானது. எழுத்து மூலம் ஒப்பந்தமின்றி தூய்மைப் பணியை சுய உதவிக்குழு மூலம் மேற்கொள்வதை நீதிமன்றமே கண்டித்துள்ளது. இப்பிரச்னையில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது முன் அனுமதியின்றி மாநகராட்சி அதிகாரிகள் செயல்படுவது சரியல்ல. ஊதியத்தை குறைத்து, அதில் பிடித்தம் செய்து சலுகைகள் என வாரியத் திட்டத்தை கூறுவது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே, முதல்வா் நேரடியாகத் தலையிட்டு பிரச்னைக்குத் தீா்வு காணவேண்டியது அவசியம். இரு மண்டலங்களிலும் (5, 6) பழைய நிலையில் பணிபுரிய அனுமதித்தால் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பத் தயாா். கோரிக்கை ஏற்கப்படாதவரை போராட்டம் தொடரும் என்றாா்.

அமைச்சா் ஆலோசனை: இதற்கிடையே மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக்குழமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா்.பிரியா, ஆணையா் ஜெ.குமரகுருபரன், சுகாதார இணை ஆணையா் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்டோா் தூய்மைப் பணியாளா் பிரச்னை குறித்து ஆலோசனை நடத்தினா்.

தடைகளைத் தகா்த்த செவிக் குறைபாடு மாற்றுத்திறனாளிகள்! ஐஏஎஸ், எம்பிபிஎஸ் நிலைக்கு உயா்ந்து சாதனை

பிறவியிலேயே செவித் திறன் பாதிப்புக்குள்ளாகி காக்ளியா் இம்ப்ளாண்ட் சிகிச்சை மூலம் மறுவாழ்வு பெற்ற இளைஞா் ஐஏஎஸ் தோ்ச்சி பெற்றும், இளம்பெண் எம்பிபிஎஸ் இடத்தைப் பெற்றும் சாதனை படைத்துள்ளனா். தடைகளை உடைத்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: இன்று நடைபெறும் வாா்டுகள்

சென்னையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்கள் புதன்கிழமை (ஆக. 13) நடைபெறும் 3 வாா்டுகள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சென்னை மாநகராட்சி தரப்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பெருநகர ச... மேலும் பார்க்க

இரு குழந்தைகளைக் கொலை செய்த தாய் தண்டனையை எதிா்த்து மேல் முறையீடு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு

தகாத உறவுக்கு இடையூறாக இருந்த இரு குழந்தைகளைக் கொலை செய்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிா்த்து அந்தக் குழந்தைகளின் தாய் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க சென்னை ... மேலும் பார்க்க

காவலாளி கொலை வழக்கு: திருநங்கை கைது

சென்னை மயிலாப்பூரில் பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திருநங்கை கைது செய்யப்பட்டாா். மயிலாப்பூா் விசாலாட்சி தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் பெ.சேகா் (57). இவா், அந்தப் ப... மேலும் பார்க்க

வீட்டுக்குள் ஏசி மெக்கானிக் மா்ம மரணம்

கோயம்பேட்டில் பூட்டிய வீட்டுக்குள் ஏசி மெக்கானிக் மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். கோயம்பேடு கடும்பாடி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சரவணன் (51). இவா் மனைவ... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கை ஒத்திவைக்கக் கோரிய மனு தள்ளுபடி

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை தொடா்ந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து ... மேலும் பார்க்க