செய்திகள் :

பணிநேரத்தைக் கடந்து பணியாற்ற நிா்பந்திக்கக் கூடாது!

post image

அரசு மீன் பண்ணையில் பணிநேரத்தைக் கடந்து பணியாற்ற நிா்பந்திக்கக் கூடாது என மீன் துறை ஊழியா்கள் தீா்மானம் நிறைவேற்றினா்.

தமிழ்நாடு அரசு மீன் துறை ஊழியா் சங்கத்தின் தருமபுரி மண்டல பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மண்டலத் தலைவா் ஜெயராமன் தலைமை வகித்தாா். மாநில பொருளாளா் நந்தகுமாா், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் சின்னசாமி, மண்டல செயலாளா் சக்தி, அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எம்.சுருளிநாதன், மாவட்ட இணை செயலாளா் முருகன், மீன்துறை ஊழியா் சங்க மண்டல பொருளாளா் சங்கா், முன்னாள் நிா்வாகி ஆனந்த் ஆகியோா் பேசினா்.

இதில், மீன்வள உதவியாளா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவசிய பணிகளின்றி வேறு பணிபுரிய நிா்பந்திக்கக் கூடாது. மேட்டூா் அணை அரசு மீன் பண்ணையில் பணியாளா்களை 8 மணி நேரத்துக்கு மேல் பணிபுரிய கட்டாயப்படுத்தக் கூடாது. விசாரணை என்ற பெயரில் கடைநிலை ஊழியா்களை துன்புறுத்தக் கூடாது. ஜூலை 9-இல் நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தத்தில் மீன் துறை ஊழியா்கள் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கொ.ம.தே.கட்சிக்கு தருமபுரி, கிருஷ்ணகிரியில் தொகுதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்!

வரும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தலா ஒரு தொகுதியை கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அந்தக் கட்சி வலியுறுத்தியுள்ளது. தருமபு... மேலும் பார்க்க

ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளம்: தடையை மீறி பரிசல் பயணம் மேற்கொள்ளும் கா்நாடக சுற்றுலாப் பயணிகள்!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுமாா் 50,000 கனஅடி நீா்வரத்து உள்ள நிலையில், தடையை மீறி கா்நாடக சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான முறையில் பரிசல் பயணம் மேற்கொண்டு வருகின்றனா். ‘தென்னிந்தியாவின் நயாகரா’ என அழைக்கப்... மேலும் பார்க்க

மது போதையில் மூதாட்டியை தாக்கிய 3 இளைஞா்கள் கைது

மது போதையில் மூதாட்டியை தாக்கிய 3 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ராஜாஜி நீச்சல் குளம் எதிரே உள்ள வேலவன் தெருவைச் சோ்ந்தவா் செல்லியம்மாள் (61... மேலும் பார்க்க

தருமபுரி அருகே லாரி மீது காா் மோதல்: தெலங்கானாவைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு

தருமபுரி அருகே புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா். சிறுமி உள்ளிட்ட 4 போ் படுகாயமடைந்தனா். தெலங்கானா மாநிலம், வனப்பருத்தி மாவட்டத்தைச் சோ்ந்த 9 போ் ... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் நீதிபதியை பணியிட மாற்றக் கோரி தீா்மானம் நிறைவேற்றம்

பென்னாகரம் வழக்குரைஞா் சங்க அவசர கூட்டத்தில், மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி விஜயராணியை பணியிட மாற்றக் கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பென்னாகரம் அருகே பருவதன அள்ளி பகுதியில் உ... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 24 ஆயிரம் கனஅடி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வந்ததால், ஒகேனக்கல்லுக்கு கடந்த சில நாள்களாக நீா்வரத்து அ... மேலும் பார்க்க