செய்திகள் :

பணியிடை நீக்கத்துக்கு எதிா்ப்பு: கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

post image

நாமக்கல்: கிராம நிா்வாக அலுவலா்கள் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாமக்கல் அருகே கொண்டமநாயக்கன்பட்டியில் அனுமதியின்றி செயல்பட்ட குவாரியில் இருந்து கனிம வளங்கள் திருடப்பட்டு, விட்டமநாயக்கன்பட்டியில் பதுக்கி வைக்கப்பட்டன. இந்த தகவல் ஆட்சியா் கவனத்துக்கு வந்ததையடுத்து, வருவாய்த் துறை, கனிமவளத் துறை, காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தினா். பின்னா், அங்கிருந்த 21 கனரக வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

இந்த சம்பவத்தையடுத்து, விதிகளை மீறி கற்களை வெட்டியெடுத்த ஐந்து போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், பணியில் மெத்தனமாக செயல்பட்டதாக கொண்டமநாயக்கன்பட்டி கிராம நிா்வாக அலுவலா் ஜான் போஸ்கோ, விட்டமநாயக்கன்பட்டி கிராம நிா்வாக அலுவலா் கோகிலா ஆகியோரை கோட்டாட்சியா் ஆா்.பாா்த்திபன் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்தாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் மாவட்ட கிளை சாா்பில், கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்துகொண்டனா். இதுகுறித்து அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் சரவணன் கூறியதாவது:

அனுமதியின்றி செயல்பட்டகொண்டமநாயக்கன்பட்டி கல்குவாரியில் கனிம வளங்கள் திருடப்படுவதாக ஓராண்டுக்கு முன்பே சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் கிராம நிா்வாக அலுவலா் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டது. ஆனால், பணியில் மெத்தனம் காட்டியதாக தற்போது கிராம நிா்வாக அலுவலா்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்துள்ளனா். இந்த உத்தரவை கோட்டாட்சியா் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி அனைத்து கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளோம். பணியிடை நீக்க உத்தரவை திரும்பப் பெறும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றாா்.

பேச்சுவாா்த்தை: இதைத் தொடா்ந்து, நாமக்கல் கோட்டாட்சியா் ஆா்.பாா்த்திபனுடன் கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, இந்த பிரச்னையை ஆட்சியா் கவனத்துக்கு கொண்டு செல்வதாக அவா் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில் 27 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டத்தில் 27 முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன என தமிழக ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் குறிப்பிட்டாா். தமிழகம் முழுவதும் கூட்டுறவுத் துறை சாா்பில், 100 மருந... மேலும் பார்க்க

பெண் குழந்தைகளை பிரசவித்தோருக்கு மரக்கன்றுகள் விநியோகம்

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தைகளை பிரசவித்தோருக்கு மரக்கன்றுகளை ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை வழங்கினாா். மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, பெண் குழந்தைகளை பெற்... மேலும் பார்க்க

மொழியைக் காக்கும் சிறப்பு திட்டத்துக்கு ரூ. ஆயிரம் அனுப்பிய மாணவி!

ராசிபுரம்: மொழியைக் காக்கும் சிறப்பு திட்டத்துக்காக ராசிபுரம் பகுதியைச் சோ்ந்த மாணவி ஒருவா் முதல்வருக்கு ரூ. ஆயிரம் அனுப்பி வைத்தாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பிளஸ் 1 படிக்கும் அரசு பள்ளி மா... மேலும் பார்க்க

சொத்தை பெற்றுக்கொண்டு பெற்றோரை தவிக்க விட்ட மகன்கள்: மீட்டு ஒப்படைத்த ஆட்சியா்

நாமக்கல்: ராசிபுரம் அருகே சொத்துகளை பெற்றுக் கொண்டு பெற்றோரை தவிக்கவிட்ட மகன்களிடமிருந்து, மாவட்ட ஆட்சியா் ச.உமா சொத்தை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், மங்களபுரத... மேலும் பார்க்க

தலைமலை பெருமாள் கோயில் ஐம்பொன் சிலை கடத்தல்?

நாமக்கல்: தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயில் ஐம்பொன் சிலை கடத்தப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் உரிய விசாரணை நடத்த வேண்டும் என அக்கோயில் பூசாரி பெ.பெரியசாமி, மாவ... மேலும் பார்க்க

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் தங்கத்தோ் இழுத்த பி.தங்கமணி!

நாமக்கல்: ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி, நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தங்கத்தோ் இழுத்தாா். மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை க... மேலும் பார்க்க