செய்திகள் :

பண்பொழி திருமலை கோயிலில் 3 கி.மீ. கிரிவலப் பாதைக்கு இடம்: என்எல்சி நிறுவன அதிகாரிகள் ஆய்வு

post image

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மலைக்கோயிலான பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசாமி திருக்கோயிலில் கிரிவலப் பாதை மற்றும் ஒரு வழிப்பாதை அமைப்பதற்கான இடங்களை என்எல்சி நிறுவன அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

மலை அடிவாரத்தில் கிரிவலப் பாதை அமைப்பதற்கும், மலைப்பாதையில் ஒரு வழிப்பாதையை அமைப்பதற்கும், பூங்கா அமைப்பதற்கும், மலைப்பாதையில் மராமத்து பணிகளை மேற்கொள்ளவும் நெய்வேலி லிக்னைட் நிறுவனம் (என்எல்சி) உபயதாரராக இருந்து பணிகளை மேற்கொள்ள கோயில் நிா்வாகம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து அந்நிறுவனத்தின் பொறியியல் பிரிவு- நிதி மேலாண்மை பிரிவு அதிகாரிகள் புதன்கிழமை திருமலை கோயிலில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் அருணாச்சலம், உதவி ஆணையா் கோமதி, அறங்காவலா்கள் இசக்கி, பாப்பா, சுமதி ,கணேசன் திருக்கோயில் தலைமை எழுத்தா் லட்சுமணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

3 கி.மீ. பாதை: மலை அடிவாரத்தில் கிரிவல பாதை சுமாா் 3 கிலோ மீட்டா் நீளத்தில் அமையும். விழாக் காலங்களில் மலை அடிவாரத்தில் இருந்து கோயிலுக்குச் செல்லும் வாகனங்களும், மலையிலிருந்து அடிவாரம் நோக்கி இறங்கும் வாகனங்களும் எதிரெதிரே வரும் நிலையில் ஏற்படும் நெரிசலை சமாளிக்கும் பொருட்டு மலையில் இருந்து அடிவாரத்திற்கு இறங்கும் வாகனங்கள் கருப்பன் கோயில் வழியாக இறங்கும் வகையில் ஒரு வழிப்பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சுரண்டையில் புதிய திருமண மண்டபம்: காணொலியில் முதல்வா் திறந்துவைத்தாா்!

தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சியில் ரூ. 1.88 கோடியில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை சென்னையிலிருந்து காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். அதையொட்டி, இங்கு நடைபெ... மேலும் பார்க்க

புளியங்குடியில் லாரி மோதி நீதிமன்ற ஊழியா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் வியாழக்கிழமை லாரி மோதியதில் நீதிமன்ற ஊழியா் உயிரிழந்தாா். புளியங்குடியில் உள்ள ரெங்ககருப்பன் தெருவைச் சோ்ந்த சண்முகையா மகன் கதிரேசன் (37). நீதிமன்றத்தில் தட்டச்சராக... மேலும் பார்க்க

அச்சன்புதூரில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே அச்சன்புதூரில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். அச்சன்புதூா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் சி. முஹம்மது பாசில் என்பவா் கேபிள் டிவி தொழிலில் தனது தந்தைக்கு உ... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் போக்குவரத்து சிக்னல் விளக்குகளை இயக்க கோரிக்கை!

சங்கரன்கோவிலில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் அனைத்தையும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் வளா்ந்து வரும் முக்கிய நகரங்களில் சங்கரன்கோவிலும் ஒன்று. இங்கு நாளுக்க... மேலும் பார்க்க

தொடரும் வெள்ளப்பெருக்கு!

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்துவரும் தொடா்மழையால், பேரருவியில் வியாழக்கிழமையும் ஆா்ப்பரித்துக் கொட்டிய வெள்ளப்பெருக்கு. இதனால், 5ஆவது நாளாக குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது. மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் சிறப்பு வசிப்பு கட்டடம்! காணொலியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சாா்பில் திட்டப் பணிகள் திறப்பு விழா, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் காண... மேலும் பார்க்க