Miss World 2025: மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வாளர் டு உலக அழகி; 23 வயதில் தாய...
பத்தாம் வகுப்பு தோ்வில் தோல்வி: மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை
கள்ளக்குறிச்சி அருகே பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோல்வியடைந்த மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் மகள் சுகந்தி (15). இவா், கள்ளக்குறிச்சி மாதிரி பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து பொதுத் தோ்வு எழுதினாா்.
தோ்வில் தோல்வியடைந்ததை அறிந்த சுகந்தி, கடந்த 16-ஆம் தேதி வீட்டிலிருந்து மாயமானாா். பெற்றோா், உறவினா்கள் அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இந்திலி புதுக்காலனி பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் சுகந்தி சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த சின்னசேலம் தீயணைப்பு நிலையத்தினா் சடலத்தை மீட்டனா்.
சின்னசேலம் போலீஸாா் சுகந்தியின் சடலத்தை உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.