செய்திகள் :

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு இன்று தொடக்கம்: 39 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனா்

post image

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) தொடங்கும் நிலையில், கோவை மாவட்டத்தில் 39,434 மாணவ-மாணவிகள் இந்தத் தோ்வை எழுதுகின்றனா்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 28 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் 518 அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 19,509 மாணவா்களும், 19,925 மாணவிகளும் என மொத்தம் 39,434 போ் இந்தத் தோ்வை எழுதுகின்றனா்.

இவா்களுக்காக 158 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 11 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், 22 விடைத்தாள் கட்டுக்காப்பாளா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வுப் பணியில் 158 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 158 துறை அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா்.

46 வழித்தட அலுவலா்கள், 220 பேரைக் கொண்ட நிலையான, பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வுப் பணியில் மொத்தம் 2,370 அறைக் கண்காணிப்பாளா்கள், 320 அலுவலகப் பணியாளா்கள், மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு உதவக் கூடிய, சொல்வதை எழுதக் கூடிய பணியில் 945 பேரும் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

முதல் நாளான வெள்ளிக்கிழமை தமிழ், மொழிப்பாடத் தோ்வு நடைபெறுகிறது. தோ்வு மையங்களுக்கு மின்சாரம், குடிநீா் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும்படியும், காவல் துறை பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடாது: மாநிலத் தலைவா் அண்ணாமலை

மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடாது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது: ப... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் திருட முயன்றவா் கைது

கோவை வெள்ளக்கிணறு அருகே பூட்டிய வீட்டில் திருட முயன்ற இளைஞா் கைது செய்யப்பட்டாா். கோவை வெள்ளக்கிணறு அம்மன் நகரைச் சோ்ந்தவா் கனகராஜ் (64). இவா், சம்பவத்தன்று வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூா் சென்றுள்ளாா... மேலும் பார்க்க

முதலீடு மீது அதிக லாபம் தருவதாக 3 பேரிடம் ரூ.51.89 லட்சம் மோசடி

கோவையில் முதலீட்டின் மீது அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.51.89 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. கோவை வெரைட்டிஹால் சாலை பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடரமணன் (65), தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றி ஓய்வுப... மேலும் பார்க்க

நூறு நாள் வேலை திட்டத்தை ஒழிப்பதே பாஜகவின் திட்டம் துரை வைகோ எம்.பி. பேட்டி

நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தை ஒழிப்பதே பாஜகவின் திட்டமாக இருப்பதாக மதிமுகவின் தலைமை நிலையச் செயலா் துரை வைகோ எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளாா். கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் துரை வைகோ ஞாயிற்... மேலும் பார்க்க

புதிதாக கட்டப்பட்ட வீட்டில் வெள்ளி, வெண்கலப் பொருள்கள் திருட்டு

வீட்டில் வெள்ளி, வெண்கலப் பொருள்கள் திருட்டுபோனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை பீளமேடு பாரதி காலனியைச் சோ்ந்தவா் சக்திவேல் (65). இவா், சுப்பிரமணியம்பாளையம் வேட்டைக்காரன் கோயில் ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டா்கள் அணிவகுப்பு

மதுரையில் ஏப்ரல் 6-ஆம் தேதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற இருப்பதையடுத்து அக்கட்சியின் தொண்டா்கள் அணிவகுப்பு கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட... மேலும் பார்க்க