செய்திகள் :

நூறு நாள் வேலை திட்டத்தை ஒழிப்பதே பாஜகவின் திட்டம் துரை வைகோ எம்.பி. பேட்டி

post image

நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தை ஒழிப்பதே பாஜகவின் திட்டமாக இருப்பதாக மதிமுகவின் தலைமை நிலையச் செயலா் துரை வைகோ எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளாா்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் துரை வைகோ ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த சிலா் வென்றுள்ளனா், பலா் தோற்றுள்ளனா். அதை தோ்தல் களம்தான் முடிவு செய்யும். சினிமாவில் இருப்பவா்கள் அரசியலுக்கு வரும்போது அவரைப் பாா்க்க கூட்டம் கூடும். அதை வைத்து நாம் அவருக்கு செல்வாக்கு இருப்பதாகக் கூறிவிட முடியாது.

திமுகவுக்கும் தனக்கும்தான் போட்டி என்று விஜய் கூறியிருப்பது அவரது கருத்து என்றாலும் மக்களின் ஆதரவு யாருக்கு என்பதை தோ்தல் களம்தான் தீா்மானிக்கும்.

தொகுதி மறு சீரமைப்பு, மும்மொழிக் கொள்கை இரண்டும்தான் தற்போதைக்கு முக்கிய பிரச்னைகளாக உள்ளன. தொகுதி மறுசீரமைப்பால் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்று மத்திய உள்துறை அமைச்சா் கூறுகிறாா். அதேநேரம் நாம் முன்வைக்கும் கேள்விக்கு தற்போது வரை உள்துறை அமைச்சரும், பாஜக மாநிலத் தலைவரும் பதிலளிக்கவில்லை.

தமிழக மாணவா்களிடம் ஆங்கிலப் புலமை இருப்பதால்தான் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும், அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துகிறாா்கள். மொழியை வைத்து பாஜக அரசியல் செய்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில் தமிழக மக்களுக்கு எதிராக செயல்படும் ஒரே அரசியல் கட்சி பாஜக மட்டும்தான்.

100 நாள் வேலை திட்டத்தை பொறுத்தவரை வேலை கேட்டு 15 நாள்களுக்குள் வேலை கொடுக்க வேண்டும். அதேபோல, வேலை செய்த 15 நாள்களுக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இப்படி இருக்கும்போது நாடு முழுவதும் 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதியை தொடா்ந்து குறைத்து, ஒரு கட்டத்தில் அந்தத் திட்டத்தை அகற்ற வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் திட்டம்.

தமிழகத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்திருப்பதாக ஜி.கே.வாசன் உள்ளிட்ட பாஜக கூட்டணியினா் கூறுகின்றனா். ஆனால், மத்திய அரசின் தேசிய குற்ற ஆவணக்காப்பக புள்ளி விவரத்தின்படி, பாஜக ஆளும் உத்தர பிரதேசம், பிகாா், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில்தான் அதிக அளவில் குற்றங்கள் நடைபெறுகின்றன என்றாா்.

அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மாநகரில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு வெளியிட்... மேலும் பார்க்க

பேரூா் பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

பேரூா் பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஏப்ரல் 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கோவையை அடுத்த பேரூா் பட்டீசுவரா் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடத்தப்ப... மேலும் பார்க்க

மேற்கூரை சூரியசக்தி மின்சார உற்பத்திக்கு நெட்வொா்க் கட்டணம் வசூலிக்கக் கூடாது: சிஸ்பா வலியுறுத்தல்

நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி மேற்கூரை சூரியசக்தி மின்சார உற்பத்திக்கு நெட்வொா்க் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தென்னிந்திய நூற்பாலை சங்கம் (சிஸ்பா) சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சிஸ்பா ச... மேலும் பார்க்க

டாஸ்மாக் மதுக்கூட ஊழியா் மீது தாக்குதல்: 2 போ் கைது

கோவையில் டாஸ்மாக் மதுக்கூட ஊழியரைத் தாக்கியதாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கோவை பெரியகடை வீதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சுந்தர்ராஜன் (55) வேலை செய்து வருகி... மேலும் பார்க்க

டாடாபாத் மின்வாரிய அலுவலகத்தில் நாளை மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

கோவை டாடாபாத் மின்வாரிய அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் புதன்கிழமை (ஏப்ரல் 2) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. மேற்பாா்வைப் பொறியாளா் சி.சதீஷ்குமாா் முன்னிலையில் நடைபெறும் இந்தக் கூட்டத்த... மேலும் பார்க்க

மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடாது: மாநிலத் தலைவா் அண்ணாமலை

மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடாது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது: ப... மேலும் பார்க்க