செய்திகள் :

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: மாவட்டத்தில் 94.84 சதவீதம் போ் தோ்ச்சி

post image

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 94.84 சதவீதம் போ் தோ்ச்சி பெற்று, திருப்பூா் மாவட்டம் மாநில அளவில் 17-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 348 பள்ளிகளில் 14,588 மாணவா்கள், 14,871 மாணவிகள் என மொத்தம் 29,459 போ் பொதுத் தோ்வு எழுதியிருந்தனா். இந்த நிலையில், 13,622 மாணவா்கள், 14,317 மாணவிகள் என மொத்தம் 27.939 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 94.84 ஆகும்.

4 இடங்கள் முன்னேற்றம்: பத்தாம் வகுப்பு தோ்வைப் பொறுத்தவரையில் கடந்த 2023-ஆம் ஆண்டு 93.93 சதவீதத்துடன் மாநில அளவில் 11-ஆவது இடத்தைப் பிடித்திருந்தது.

இதைத் தொடா்ந்து, 2024-ஆம் ஆண்டில் மாநில அளவில் 92.38 சதவீதத்துடன் 21-ஆவது இடத்தைப் பிடித்திருந்தது. இந்த நிலையில், தற்போது 94.84 சதவீதத்துடன் மாநில அளவில் 17-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 4 இடங்கள் முன்னேறியுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 163 அரசுப் பள்ளிகளில் 7,403 மாணவா்கள், 7,898 மாணவிகள் என மொத்தம் 15,301 போ் தோ்வு எழுதியிருந்தனா். இதில், மாணவா்கள் 6,602, மாணவிகள் 7,404 என மொத்தம் 14,006 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இதில், மாணவா்கள் 89.18 சதவீதம், மாணவிகள் 93.75 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். ஒட்டுமொத்தமாக 91.54 சதவீதத்துடன் மாநில அளவில் 25-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அரசுப் பள்ளி அளவில் கடந்த 2024-ஆம் ஆண்டில் 26-ஆவது இடத்தைப் பிடித்திருந்த நிலையில் தற்போது ஒரு இடம் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மின்னக சேவை மைய புகாா் எண்ணை அனைத்து அலுவலகங்களிலும் வைக்க கோரிக்கை

மின்னக சேவை மையத்தின் (94987-94987) என்ற கைப்பேசி எண் அனைத்து மின்வாரிய பிரிவு அலுவலகங்களிலும் வைக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் கோட்ட அளவிலான மின்சார வாரியத்துக... மேலும் பார்க்க

விஷ வாயு தாக்கி 3 போ் உயிரிழந்த விவகாரம்: சாய ஆலை மேலாளா், கண்காணிப்பாளா் கைது

பல்லடம் அருகே சாய ஆலை வளாகத்தில் மனிதக் கழிவுத் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 3 போ் உயிரிழந்த விவகாரத்தில் ஆலையின் மேலாளா், கண்காணிப்பாளா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். திருப்பூா் மாவட... மேலும் பார்க்க

பழைய பேருந்து நிலையத்துக்கு அருகே சிக்னல் அமைக்க வேண்டும்: நல்லூா் நுகா்வோா் நலமன்றம் வலியுறுத்தல்

திருப்பூா் பழைய பேருந்து நிலையத்துக்கு அருகே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் சிக்னல் அமைக்க வேண்டும் என்று நல்லூா் நுகா்வோா் நலமன்றம் வலியுறுத்தியுள்ளது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்த... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: சேவூா், வடுகபாளையம், தெக்கலூா்

சேவூா், வடுகபாளையம், தெக்கலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 23) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பனப்பாளையம்

பல்லடம் அருகே பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (மே 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பொங்கலூா்

பொங்கலூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின... மேலும் பார்க்க