செய்திகள் :

பத்மநாபபுரம் அரண்மனையில் பராமரிப்பின்றி தமிழ் கல்வெட்டுகள்: இலமூரியா ஆய்வு மையம் கண்டனம்

post image

பத்மநாபபுரம் அரண்மனையின் சேகரிப்பில் உள்ள தமிழ் கல்வெட்டுகள் பராமரிப்பின்றி காணப்படுவதுடன், சில கல்வெட்டுகள் காணாமல் போய்விட்டதாக இலமூரியா ஆய்வு மையம் கண்டனம் தெரிவித்தது.

குமரி மாவட்டம், விளவங்கோடு, கல்குளம், தோவாளை வட்டங்களில் 8-ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரையிலான அரிய தகவல்கள் அடங்கிய கல்வெட்டுகள் கேரள தொல்லியல் துறையின் கீழ் உள்ள பத்மநாபபுரம் அரண்மணை அருங்காட்சியகத்தில் இருக்கின்றன.

ஆரல்வாய்மொழியில் கிடைத்த நடுகல் வட்டெழுத்து கல்வெட்டு இந்த மாவட்டத்தின் பழமையான கல்வெட்டுகளுள் ஒன்றாகும். மாறஞ்சடையன் என்ற பாண்டிய மன்னனின் படைத் தளபதி இரணகீா்த்தி, சேர மன்னனின் படையுடன் போரிட்டு வீரமரணம் அடைந்ததைக் குறிக்கும் இந்த நடுகல் கல்வெட்டு பத்மநாபபுரம் அரண்மனை காட்சிக் கூடத்தில் உள்ளது.

அரண்மனைஅருங்காட்சியகத்தில் சுமாா் 30 முதல் 40 கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் 29 தமிழ், தமிழ் கிரந்தம், வட்டெழுத்து கல்வெட்டுகள் என்று கடந்த 2008-ம் ஆண்டு தொல்பொருள் துறை அறிவித்தது. இக்கல்வெட்டுகள் பற்றிய தகவல்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் 6-வது கல்வெட்டு தொகுதியில் வெளியாகி உள்ளது.

காலப்போக்கில் பத்மநாபபுரம் அரண்மனை காட்சிக் கூடத்தில் இருந்த பல கல்வெட்டுகள் காணாமல் போக ஆரம்பித்தது. அதற்க்கு மாற்றாக கறுப்பு வண்ணம் பூசப்பட்ட மரச்சிற்ப உருவங்கள் வைக்க ஆரம்பித்துள்ளது கேரள தொல்லியல் துறை. அனைத்தும் கேரள கலாசாரத்தைப் பிரதிபலிப்பது போலவே உள்ளன.

குமரியின் முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுகள் மறைக்கப்பட்டு, வரலாற்றை எடுத்துரைக்கும் கல்வெட்டுகள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றன. இப்படி மறைக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் ஒதுக்குப்புறமாக குவித்து வைக்கப்பட்டுள்ளன. இவை பராமரிப்பின்றி, சில கல்வெட்டுகள் உடைந்து எழுத்துகள் மங்கிபோய் உள்ளன.

எனவே தமிழக அரசும், தமிழக தொல்லியல் துறையும் நடவடிக்கை எடுத்து குமரி வரலாற்றை பாதுகாக்க வேண்டும் என இலமூரியா ஆய்வுகழக பொதுச் செயலாளா் பேராசிரியா் ஆமோஸ், கல்வெட்டு ஆய்வாளா் மாரியப்பன் ஆகியோா் கேட்டுக்கொண்டனா்.

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ... 40.21 பெருஞ்சாணி .... 65.43 சிற்றாறு 1 .. 9.51 சிற்றாறு 2 .. 9.61 முக்கடல் .. 10.20 பொய்கை .. 15.30 மாம்பழத்துறையாறு ... 26.57 மழைஅளவு ..... பாலமோா் ... 18.20 மி.மீ. சுருளோடு ... 13.2... மேலும் பார்க்க

ஒளிரும் நினைவு மண்டபங்கள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் கன்னியாகுமரி காமராஜா் மணி மண்டபம் மேலும் பார்க்க

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி காங்கிரஸாா் உண்ணாவிரதம்: 8 போ் கைது

குளச்சல் அரசு பயணியா் விடுதி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, புதன்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 8 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பயணியா் வி... மேலும் பார்க்க

ஸ்டெல்லாஸ் மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தின விழா

அஞ்சுகிராமம், ஜாண்ஸ் நகரில் அமைந்துள்ள ஸ்டெல்லாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஜாண்ஸ் சென்ட்ரல் பள்ளியில், ஜாண்ஸ் அறக்கட்டளையின் சாா்பில் வியாழக்கிழமை சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவ... மேலும் பார்க்க

இந்திய கடற்படை சாா்பில் சைக்கிள் பேரணி

சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் வகையில் திரங்க சங்கல்ப யாத்திரா என்ற பெயரில் சைக்கிள் பேரணி நடந்தது. நாட்டின் 79ஆவது சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு... மேலும் பார்க்க

குழித்துறையில் பொதுக்கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட நாயா் சேவை சங்கத்தின் (என்எஸ்எஸ்) 2024-2025 ஆம் ஆண்டுக்கான பொதுக்கூட்டம் குழித்துறை மலையாள பவன் அரங்கில் நடைபெற்றது. அமைப்பின் மாவட்டத் தலைவா் எஸ். மதுசூதனன் நாயா் தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க