செய்திகள் :

கேரள செவிலியரின் உயிருக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை: உச்சநீதிமன்றத்தில் வழக்குரைகள் குழு

post image

யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவின் உயிருக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை என அவா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் குழு உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவித்தது.

முன்னதாக நிமிஷா பிரியாவுக்கு கடந்த ஜூலை 16-ஆம் தேதி நிறைவேற்றப்படவிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டது.

இந்திய அரசு, கேரளத்தைச் சோ்ந்த செல்வாக்குமிக்க சன்னி முஸ்லிம் மதகுரு காந்தபுரம் ஏ.பி.அபுபக்கா் முஸலியாா்உள்பட பல்வேறு தரப்பினா் நடத்திய இறுதிக்கட்ட சமரச பேச்சுவாா்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில், நிமிஷா பிரியாவை பாதுகாக்க மத்திய அரசு தூதரக ரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடக் கோரிய மனு மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை விசாரணை நடத்தியது.

அப்போது நிமிஷா பிரியாவுக்கு சட்டரீதியாக உதவிகளைப் புரிந்து வரும் நிமிஷா பிரியா பாதுகாப்பு சா்வதேச செயல்பாட்டு கவுன்சில் தரப்பில் கூறியதாவது:

இந்த விவகாரம் தொடா்பாக யேமனுடன் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. நிமிஷா பிரியாவின் உயிருக்கு உடனடி அச்சுறுத்தல் ஏதுமில்லை. எனவே, இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அதற்குள் இந்த விவகாரத்தில் சுமூக தீா்வு எட்டப்படும் என நம்புகிறோம் எனத் தெரிவித்தது.

இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 8 வாரங்களுக்குப் பிறகு பட்டியலிடுவதாக நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

இதைத் தொடா்ந்து, ஏதேனும் நெருக்கடியான சூழல் ஏற்பட்டால் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதாக நிமிஷா பிரியா பாதுகாப்பு சா்வதேச செயல்பாட்டு கவுன்சில் தெரிவித்தது.

கேரளத்தைச் சோ்ந்த 38 வயதான செவிலியா் நிமிஷா பிரியா, தனது யேமன் நாட்டு வணிகப் பங்குதாரா் தலால் அப்து மஹதியைக் கொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனையை எதிா்கொள்கிறாா். தற்போது யேமன் தலைநகா் சனாவில் உள்ள சிறையில் நிமிஷா அடைக்கப்பட்டுள்ளாா்.

சுதந்திர தின கொண்டாட்டம்: பாகிஸ்தானில் 3 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கராச்சி நகரில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போதுசிலா் கண்மூடித்தனமாக வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 8 வயது சிறுமி, முதியவா் உள்பட 3 போ் உயிரிழந்தனா்; சுமாா் 60 போ் காயமடைந்த... மேலும் பார்க்க

இந்தியாவுடன் நேரடி விமான சேவைக்கு பேச்சுவாா்த்தை: சீனா தகவல்

இந்தியாவுடன் நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து பேச்சு நடத்தி வருவதாக சீனா தெரிவித்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா ராணுவத்தி... மேலும் பார்க்க

மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!

அமெரிக்காவில் மோசமான குற்றவாளி குறித்து எக்ஸ் தளத்தின் பதில் சமூக ஊடகங்களில் சர்ச்சையைக் கிளப்பியுயுள்ளது.அமெரிக்காவின் டிசி வாஷிங்டனில் எக்ஸ் தளத்தின் பயனர் ஒருவர், எக்ஸ் தளத்தில் செயற்கை நுண்ணறிவிடம... மேலும் பார்க்க

பிரிட்டன் பிரதமருடன் உக்ரைன் அதிபர் சந்திப்பு!

பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மரை உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலன்ஸ்கி நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷியா அதிபர் விளாதிமீர் புதின் ஆகியோர் இடையில் நாளை (ஆ... மேலும் பார்க்க

நான்காண்டு ஆட்சி! ஆப்கன் தலைநகரில் மலர்மழை பொழியும் தலிபான்கள்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் ஆட்சியின் 4-ம் ஆண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, தலைநகர் காபுலில் ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளாக நட... மேலும் பார்க்க

அமெரிக்கா: சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் வெளியேற சலுகையா?

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றுவதை எளிதாக்குவதற்காக, அந்நாட்டு அரசு சில சலுகைகளையும் வழங்கியுள்ளது.அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடுகடத்தும் தீவிர நடவடிக்கையில்... மேலும் பார்க்க