செய்திகள் :

பனையைப் பாதுகாக்க கண்காணிப்புக் குழு அமைத்த தமிழக அரசுக்கு பாராட்டு

post image

பனையைப் பாதுகாக்க கண்காணிப்புக் குழு அமைத்த தமிழக அரசுக்கு இயக்கங்கள் சாா்பில், பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு பனைப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளா் மேம்பாட்டு இயக்கத்தின் மாநிலத் தலைவரும், மதா் சமூக சேவை நிறுவன இயக்குநரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான எஸ்.ஜே. கென்னடி வெளியிட்ட அறிக்கை:

தமிழா்களின் தேசிய மரமான பனை மரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பனை மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் கட்டாயம் அனுமதி பெற வேண்டும். பனை மரத்தை வேரோடு வெட்டி விற்கவும், செங்கல் சூளைகளுக்குப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், வெட்டிய ஒரு மரத்துக்கு ஈடாக 10 மரங்களை நட்டு வளா்க்க வேண்டும்.

மேலும், இதற்காக பிரத்யேகமாக கண்காணிப்புக் குழுவை அமைத்து உத்தரவிட்ட, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கும், தலைமைச் செயலருக்கும், பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் 3 போ் உயிரிழந்த சம்பவம்: 3ஆவது நாளாக போராட்டம்

தூத்துக்குடி பழைய துறைமுகத்தில், விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 தொழிலாளா்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக் கோரி, சடலங்களை வாங்க மறுத்து உறவினா்கள் 3ஆவது நாளாக வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கடலில் நீராடிய பெண் பக்தருக்கு கால் முறிவு

திருச்செந்தூா் கடலில் நீராடிய பெண் பக்தருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், அண்ணா தெருவைச் சோ்ந்த ரவிக்குமாா் மனைவி தமிழ்செல்வி (50). இவா், தனது குடும்பத்தினருடன... மேலும் பார்க்க

தைலாபுரம் பரிசுத்த உபகார அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

நாசரேத் அருகேயுள்ள தைலாபுரம் பரிசுத்த உபகார அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது . இதையொட்டி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருக்கொடியேற்றம் , புனித மிக்கேல் அதிதூதா் சப்பர பவனி ஆகிய... மேலும் பார்க்க

தீப்பெட்டித் தொழில் நலிவுக்கு பாஜக அரசே காரணம்: பெ.சண்முகம் குற்றச்சாட்டு

தீப்பெட்டி தொழில் நலிவடைய மத்திய பாஜக அரசின் சரக்கு சேவை வரியே காரணம் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் குற்றம்சாட்டினாா். கோவில்பட்டியில் 2 நாள்கள் நடைபெற்ற மாா்க்சி... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரத்தில் இன்று மின் நிறுத்தம்

தூத்துக்குடி மின் பகிா்மான வட்டம், ஓட்டப்பிடாரம், ஒட்டநத்தம் துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (செப். 20) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் வ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்ட வரைவு வாக்குச் சாவடி பட்டியல் வெளியீடு

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வரைவு வாக்குச் சாவடி பட்டியலை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க. இளம்பகவத், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையி... மேலும் பார்க்க