செய்திகள் :

பயமறியாத இளம் இந்திய வீரர்கள்..! ஆஸி. வீரர் புகழாரம்!

post image

ஆஸ்திரேலியாவின் ஆல்-ரவுன்டரும் பஞ்சாப் கிப்ஸ் அணி வீரருமான மார்கஸ் ஸ்டாய்னிஸ் இளம் இந்திய வீரர்கள் பயமில்லாமல் விளையாடுவதாகக் கூறியுள்ளார்.

18-ஆவது ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் குஜராத்தை வீழ்த்தியது.

இதில் அறிமுக இளம் வீரர் பிரியன்ஸ் ஆர்யா சிறப்பாக விளையாடினார். மும்பை அணியிலும் விக்னேஷ் புதூர் சிறப்பாக பந்து வீசினார்.

இந்நிலையில் பிடிஐ-க்கு அளித்த நேர்காணலில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் கூறியதாவது:

பயமறியாத இளம் இந்திய வீரர்கள்

இந்திய கிரிக்கெட்டில் சிறந்த ஆழமான வீரர்கள் இருக்கிறார்கள். எப்போதும் இருக்கிறார்கள். அவர்களது திறமையை உலகிற்கு காட்ட காத்திருக்கிறார்கள்.

இந்தியர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். ஐபிஎல் -உடன் வளரும்போது தங்களது இளம் பருவத்திலேயே அழுத்தமிக்க போட்டிகளில் விளையாடுகிறார்கள்.

குறிப்பாக இந்திய அணிக்காக விளையாடும்போது இளம் வீரர்கள் பயமில்லாமல் விளையாடுவதைப் பார்க்க சிறப்பாக இருக்கிறது.

ஐபிஎல் - சொந்த மண்ணில் விளையாடுவது போலிருக்கும்

இதுவரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடாத சில பஞ்சாப் வீரர்கள் பிரமிக்க வைக்கிறார்கள்.

அதிகமான ஆஸி. வீரர்கள் அணியில் இருக்கிறார்கள். அதனால், இது சொந்த மண்ணில் இருப்பதுபோலவே இருக்கிறது.

நான் இங்கு மாறிய பிறகு இது எனது 2ஆம் ஆண்டு ஐபிஎல் தொடராகும். அதனால் இது பழக்கப்பட்டதாகிவிட்டது. நான் ஐபிஎல்லை நேசிக்கிறேன். இதற்காக நான் காத்திருந்தேன் என்றார்.

பஞ்சாப் அடுத்த போட்டியில் ஏப்.1ஆம் தேதி லக்னௌ அணியுடன் மோதவிருக்கிறது.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் மிடில் ஆர்டர் பிரச்னையா? ஷுப்மன் கில் பதில்!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் மிடில் ஆர்டர் குறித்து அந்த அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.ஐபிஎல் தொடரில் அகமதாபாத் திடலில் நேற்று (மார்ச் 29) நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை... மேலும் பார்க்க

மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகள்; 163 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஹைதராபாத்!

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 163 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஐபிஎல் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்ற... மேலும் பார்க்க

சுனில் நரைனிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்: குல்தீப் யாதவ்

சுனில் நரைனிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டதாக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான குல்தீப் யாதவ், நடப்பு ஐபிஎல் த... மேலும் பார்க்க

ஐபிஎல் தொடரில் மிட்செல் ஸ்டார்க்கின் ஆதிக்கம்: ஹெட், கிஷன், நிதீஷ் ஆட்டமிழப்பு!

தில்லி கேபிடல்ஸ் அணி வீரர் மிட்செல் ஸ்டார்க் 3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். முதல் ஓவரில் ஸ்டார்க் ஓவரில் அபிஷேக் சர்மா ரன் அவுட்டானார். 3ஆவது ஓவரில் 1, 3ஆவது பந்துகளில் முறையே இஷான் க... மேலும் பார்க்க

முதல் ஓவரிலேயே ரன் அவுட்டான அபிஷேக் சர்மா..! 25/3 ரன்களுடன் சன்ரைசர்ஸ் தடுமாற்றம்!

தில்லிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ரன் அவுட்டானார். இந்த ஐபிஎல் சீசனின் 10ஆவது போட்டியில் தில்லை எதிர்த்து தனது போட்டியில் சன்ரைசர்ஸ் தனது சொந்த மண்ணில் விளையாட... மேலும் பார்க்க

கே.எல்.ராகுல் சேர்ப்பு: தில்லிக்கு எதிராக சன்ரைசர்ஸ் பேட்டிங் தேர்வு!

தில்லிக்கு எதிராக டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். ராஜஸ்தானிடம் முதல் போட்டியில் வென்ற சன்ரைசர்ஸ் அணி 2ஆவது போட்டியில் லக்னௌவிடம் தோற்றது. இந்நிலையில் இந்த ஐபி... மேலும் பார்க்க