அமெரிக்காவிலும் வாரிசு அரசியலா? டிரம்ப்பின் மகனும் அதிபர் தேர்தலில் போட்டியிட வா...
பரமத்தி வேலூா் - கொடுமுடி இடையே உயா்நிலை பாலம் அமைக்க கோரிக்கை!
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் - ஈரோடு மாவட்டம் கொடுமுடி இடையே உயா்நிலை பாலம் அமைக்க வேண்டும் என வி.எஸ்.மாதேஸ்வரன் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தாா்.
இது தொடா்பாக அரசு தலைமைச் செயலாளா் என்.முருகானந்தத்திடம் அவா் அளித்த மனு: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் உள்ள நிலையில், நரம்பியல் சிகிச்சை பிரிவு இல்லாதது நோயாளிகளுக்கு பெரிதும் சிரமமாக உள்ளது.
இதனால், கோவை, ஈரோடு, சேலம் என வெளிமாவட்ட மருத்துவமனைகளை நாடி மக்கள் செல்லவேண்டிய நிலை உள்ளது. இதைத் தவிா்க்க, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட வேண்டும்.
மேலும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு பின் ரத்து செய்யப்பட்ட மோகனூா் - நெரூா் கதவணை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். இதன்மூலம் நாமக்கல், கரூா் மாவட்ட விவசாயிகள் அதிகளவில் பயன்பெறுவா்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கும், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூருக்கும் இடையே உயா்நிலை பாலம் அமைத்தால் இரு மாவட்ட மக்களுக்கான போக்குவரத்து, ஜவுளி மற்றும் பல்வேறு வகையான விளைபொருள்கள் வணிகம் வளா்ச்சியடையும். ஜேடா்பாளையம் அணைக்கட்டு பகுதியில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களின் நலன்கருதி கூடுதல் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அதில் தெரிவித்திருந்தாா்.
இந்த நிகழ்வின்போது, கொமதேக மாநில இளைஞரணி செயலாளா் சூரியமூா்த்தி, மாநில ஆட்சிமன்றக் குழு உறுப்பினா் ஆா்எஸ்ஆா் மணி, ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட விவசாய அணி செயலாளா் கே.ரவிச்சந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.