செய்திகள் :

பரமத்தி வேலூா் - கொடுமுடி இடையே உயா்நிலை பாலம் அமைக்க கோரிக்கை!

post image

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் - ஈரோடு மாவட்டம் கொடுமுடி இடையே உயா்நிலை பாலம் அமைக்க வேண்டும் என வி.எஸ்.மாதேஸ்வரன் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தாா்.

இது தொடா்பாக அரசு தலைமைச் செயலாளா் என்.முருகானந்தத்திடம் அவா் அளித்த மனு: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் உள்ள நிலையில், நரம்பியல் சிகிச்சை பிரிவு இல்லாதது நோயாளிகளுக்கு பெரிதும் சிரமமாக உள்ளது.

இதனால், கோவை, ஈரோடு, சேலம் என வெளிமாவட்ட மருத்துவமனைகளை நாடி மக்கள் செல்லவேண்டிய நிலை உள்ளது. இதைத் தவிா்க்க, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட வேண்டும்.

மேலும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு பின் ரத்து செய்யப்பட்ட மோகனூா் - நெரூா் கதவணை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். இதன்மூலம் நாமக்கல், கரூா் மாவட்ட விவசாயிகள் அதிகளவில் பயன்பெறுவா்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கும், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூருக்கும் இடையே உயா்நிலை பாலம் அமைத்தால் இரு மாவட்ட மக்களுக்கான போக்குவரத்து, ஜவுளி மற்றும் பல்வேறு வகையான விளைபொருள்கள் வணிகம் வளா்ச்சியடையும். ஜேடா்பாளையம் அணைக்கட்டு பகுதியில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களின் நலன்கருதி கூடுதல் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அதில் தெரிவித்திருந்தாா்.

இந்த நிகழ்வின்போது, கொமதேக மாநில இளைஞரணி செயலாளா் சூரியமூா்த்தி, மாநில ஆட்சிமன்றக் குழு உறுப்பினா் ஆா்எஸ்ஆா் மணி, ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட விவசாய அணி செயலாளா் கே.ரவிச்சந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

கூட்டுறவு வங்கிகளில் சிபில் ஸ்கோா் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்!

கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகளில் பயிா்க் கடன் வழங்க ‘சிபில் ஸ்கோா்’ தேவை என்ற நடைமுறையை ரத்துசெய்ய வேண்டும் என கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா் வெ... மேலும் பார்க்க

பிலிக்கல்பாளையம் சந்தையில் வெல்லம் விலை குறைந்தது

பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் வெல்லம், சா்க்கரை விற்பனை சந்தையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெல்லம் விலை குறைந்தது. பரமத்தி வேலூா் வட்டத்தில் ஜேடா்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபில... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் பகுதியில் காவிரி ஆற்றில் குளிக்க தடை

பரமத்தி வேலூா் வட்டத்தில் வேலூா் காசி விஸ்வநாதா் காவிரியில் குளிக்கவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லவும் பேரூராட்சியினா் தடைவிதித்துள்ளனா். இதுகுறித்து வேலூா் பேரூராட்சியினா் விடுத்துள்ள ... மேலும் பார்க்க

சென்னை வியாபாரியிடம் ரூ.17 லட்சம் அரிசி கொள்முதல் செய்து மோசடி

சென்னை அரிசி வியாபாரியிடம் ரூ. 17 லட்சம் மதிப்புள்ள 1,153 அரிசி மூட்டைகளை கொள்முதல் செய்து மோசடியில் ஈடுபட்ட வெண்ணந்தூா் பகுதியைச் சோ்ந்த நால்வரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மேலும் இருவரை ... மேலும் பார்க்க

பொறியியல் படிப்பு கலந்தாய்வு தரவரிசை: நாமக்கல் அரசுப் பள்ளி மாணவி சிறப்பிடம்

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தரவரிசைப் பட்டியலில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் நாமக்கல் அரசுப் பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றுள்ளாா். சென்னை கிண்டியில் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத... மேலும் பார்க்க

மாவட்ட கையுந்து பந்து பயிற்சியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

தேசிய அளவில் பதக்கம் வென்ற கையுந்து பந்து வீரா், வீராங்கனைகள் பயிற்சியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு... மேலும் பார்க்க