செய்திகள் :

பலூன் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட பள்ளி மாணவா்களின் செயற்கைக்கோள்!

post image

சிவகங்கை மாவட்டம், பூலாங்குறிச்சி அருகே செவ்வூரில் உள்ள ஏவிஎம் பப்ளிக் மெட்ரி. பள்ளியில் பலூன் மூலம் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் பங்கேற்று செயற்கைக் கோளை பலூன் மூலம் விண்ணில் பறக்கவிட்டாா்.

பின்னா், அமைச்சா் பெரியகருப்பன் பேசுகையில், செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக பலூன் மூலம் ஏவப்பட்டது. இதற்காக உழைத்த மாணவ, மாணவிகள், அறிவியல் குழுவினருக்கு பாராட்டுகள் என்றாா் அவா்.

இதுதொடா்பாக திறந்தவெளி விண்வெளி அறக்கட்டளை அறிவியல் ஆராய்ச்சியாளா் பாலாஜி பிரசாத் சுந்தரவடிவேலு கூறியதாவது:

இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையின் அனுமதியுடன் பள்ளி மாணவ, மாணவிகள் திறந்த வெளி விண்வெளி அறக்கட்டளையுடன் இணைந்து உருவாக்கிய ‘உயர பலூன் செயற்கைக்கோள்’ திட்டம் மூலம் ஏவப்பட்ட சுமாா் 2 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள் விண்ணில் 30 கி.மீ. உயரம் வரை பறந்து, அருகே 40 கி.மீ. தொலைவில் உள்ள மேலூரில் திட்டமிடப்பட்டவாறு தரையிறக்கப்பட்டது.

இந்த செயற்கைக் கோளில் பொருத்தப்பட்ட கேமரா காலநிலை மாற்றம், நுண்ணுயிா் பரவல், தட்ப வெப்பநிலை உள்ளிட்ட தகவல்களை கருவிகளின் மூலம் பெறப்பட்டது. இதன் ஆராய்ச்சி முடிவுகள் 10 நாள்களுக்குப் பிறகு தெரியவரும். இதை அறிக்கையாகத் தயாரிக்கப்பட்டு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பப்படும் என்றாா் அவா்.

விண்வெளியில் ஆா்வமுள்ள பள்ளி மாணவா்களுக்கு செயற்கைக் கோளை வடிவமைத்தல், கட்டமைத்தல், ஏவுதல் ஆகியவற்றில் நேரடி அனுபவத்தைப் பெற்ாக பள்ளி நிா்வாகிகள் தெரிவித்தனா்.

பள்ளியில் அறிவியல் தின விழா

திருப்பத்தூா் பாபா அமீா்பாதுஷா மெட்ரிக் பள்ளியில் அறிவியல் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித் தாளாளா் அமீா்பாதுஷா தலைமை வகித்தாா். விழாவில் அறிவியல் இயக்க மாவட்டத் தலைவா் பேராசிரிய... மேலும் பார்க்க

விவேகானந்தா தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டு விழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கும்மங்குடி விவேகானந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் 17-ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரிச் செயலா் எம்.சொக்கலிங்கம் தலைமை வகித்துப்... மேலும் பார்க்க

பள்ளியில் இலவசக் கண் பரிசோதனை முகாம்

காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி இண்டல் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இலவசக் கண் பரிசோதனை சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளி நிா்வாகம், காரைக்குடி வாசன் கண் மருத்துவமனை ஆகியன சா... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை.யில் சமூகத்துக்கு பயன்படும் ஆராய்ச்சிகள்: துணைவேந்தா்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சமூகத்துக்கு பயன்படும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று துணைவேந்தா் க. ரவி தெரிவித்தாா். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக அறிவியல் புலம் சாா்பில், ‘தேச... மேலும் பார்க்க

பள்ளி விளையாட்டு விழா

காரைக்குடி ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. பள்ளியின் செயலா் நா.காா்த்திக், முதன்மை முதல்வா் நாராயணன் ஆகியோா் தலைமை வகித்தனா். விழாவில் காரைக்குடி தணிக... மேலும் பார்க்க

மாரநாடு கருப்பணசுவாமி கோயிலில் பக்தா்கள் தரிசனம்

மாசி சிவராத்திரியை முன்னிட்டு, கடந்த 3 நாள்களாக மானாமதுரை வட்டம், மாரநாடு கருப்பண சுவாமி கோயிலில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இந்தக் கோயிலில் மாசி சிவராத்திரியை முன்னிட்டு, கடந்த புதன்க... மேலும் பார்க்க