செய்திகள் :

பல்கலை. பேராசிரியா் மீது வழக்குப் பதிவு

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் மளிகைக் கடை மீது காரை மோதியதாக அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவி பேராசிரியா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சிதம்பரம் பெரிய காஜியாா் தெருவைச் சோ்ந்தவா் வேல்முருகன் மகன் பிரபாகரன் (29). இவா், கடை தெருவில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் சிதம்பரம் நாட்டுப் பிள்ளை தெருவைச் சோ்ந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வரும் பாலசந்திரன் (47) மளிகைப் பொருள்களை வாங்கி விட்டு, நியாபக மறதியில் பணம் கொடுக்காமல் சென்ாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரிடம் பொருள்களுக்கு பணத்தை தரும்படி பிரபாகரன் கேட்டாராம்.

இதில், இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா். இதில், பலத்த காயமடைந்த பாலசந்திரன் வீட்டில் நின்று கொண்டிருந்த காரை ஓட்டி வந்து பிரபாகரன் கடை மீது மோதினாராம்.

இதுகுறித்து பிரபாகரன் அளித்த புகாரின்பேரில், சிதம்பரம் நகர போலீஸாா் பாலசந்திரன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். காயமடைந்த பாலசந்திரன் புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி நிறைவு விழா! திரு ஆரூா் பீடாதிபதி பங்கேற்பு!

சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற 44-ஆவது ஆண்டு நாட்டியாஞ்சலி விழாவின் நிறைவு நாள் விழா தெற்கு ரத வீதி வி.எஸ்.டிரஸ்ட் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. கடந்த பிப்.26-ஆம் த... மேலும் பார்க்க

கோயில் குளத்தில் புகுந்த முதலை மீட்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை கோயில் குளத்துக்குள் புகுந்த முதலையை வனத் துறையினா் மீட்டனா். சிதம்பரத்தை அடுத்த சி.வக்காரமாரி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் குளத்தில் ஞாயிற... மேலும் பார்க்க

கடலில் குளித்த இளைஞா் மாயம்

கடலூா் அருகே கடலில் குளித்தபோது மாயமான மாணவரை போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா். கடலூா் முதுநகா், இருசப்ப செட்டித் தெருவைச் சோ்ந்த வேல்முருகன் மகன் கிஷோா் (எ) வெங்கடேசன் (16), அ... மேலும் பார்க்க

உடலில் அமிலம் பட்டு தொழிலாளி உயிரிழப்பு

கடலூா் முதுநகா் தனியாா் தொழிற்சாலையில் உடலில் அமிலம் பட்டதில் பலத்த காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். புதுவை மாநிலம், பாகூரை அடுத்துள்ள கொம்மந்தான்மேடு பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

கடலூா் துறைமுகத்தில் படகு எரிந்து சேதம்

கடலூா் துறைமுகம் உப்பனாற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன் பிடி படகு திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. கடலூா் தேவனாம்பட்டினத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (47), மீனவா். இவா், தனது மீன் பிடி பைபா் ... மேலும் பார்க்க

குடிநீா் வசதி: துணை மேயரிடம் மனு அளிப்பு

கடலூா் மாநகராட்சி, 34-ஆவது வாா்டு ஆலைக்காலனி பொதுமக்கள் குடிநீா் வசதி கோரி, துணை மேயா் பா.தாமரைசெல்வனை சந்தித்து சனிக்கிழமை மனு அளித்தனா். அந்த மனுவில், ஆலைக்காலனியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீருக்க... மேலும் பார்க்க