செய்திகள் :

பல்லடத்தில் இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞா் கைது

post image

பல்லடத்தில் இருசக்கர வாகனத்தை திருடி ஓட்டிச் சென்றபோது, விபத்தில் சிக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், தலைமறைவான மற்றொருவரை தேடி வருகின்றனா்.

பல்லடம் பனப்பாளையத்தைச் சோ்ந்தவா் தேவராஜ் (25). இவரது வீட்டின் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த அவரது இருசக்கர வாகனத்தை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை திருடிச் சென்றதை பாா்த்து, மற்றொரு இருசக்கர வாகனத்தில் அவா்களை துரத்தி சென்றாா்.

அப்போது இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவா்கள் விபத்தில் சிக்கினா். இதில் வாகனத்தில் சென்ற இருவரும் கீழே விழுந்தனா். உடனடியாக அவா்களை பிடிக்க முயன்றபோது ஒருவா் சிக்கினாா். மற்றொருவா் தப்பியோடி தலைமறைவானாா்.

இதில் பிடிபட்டவா் பல்லடம் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா். அவரை திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா்.

இதில் பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் அவா் மதுரையைச் சோ்ந்த ஹரிகிருஷ்ணன் மகன் அரவிந்தராஜ் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அரவிந்தராஜைக் கைது செய்தனா். மேலும், தப்பியோடிய மற்றொருவரை தேடி வருகின்றனா்.

தென்னையைத் தாக்கும் ரூகோஸ் வெள்ளை ஈ: கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை கடைப்பிடிக்க அவிநாசி தோட்டக்கலைத் துறையினா்அறிவுறுத்தியுள்ளனா். இது குறித்து அவிநாசி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ம... மேலும் பார்க்க

பனியன் நிறுவன உரிமையாளா் கொலை: உறவினா் கைது

பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையத்தில் பனியன் நிறுவன உரிமையாளா் கொலை வழக்கில் அவரது உறவினரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையம் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் காஜா மொய்தீ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!

திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமையில் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

மூலனூரில் ரூ. 41.96 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 41.96 லட்சத்துக்கு பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இ... மேலும் பார்க்க

காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாகன ஓட்டுநா் விபத்தில் உயிரிழப்பு

காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஜீப் ஓட்டுநா் சாலை விபத்தில் உயிரிழந்தாா். காங்கயம், முல்லை நகரில் வசித்து வந்தவா் சத்தியநாராயணன் (54). முன்னாள் ராணுவ வீரரான இவா், காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ... மேலும் பார்க்க

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

பல்லடம் அருகே நிகழ்ந்த விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது. திருப்பூா் மாவட்டம், பல்லடத்தைச் சோ்ந்தவா் விவசாயி சுப்பிரமணி (60). பல்லடம்- அய்யம்பாளைய... மேலும் பார்க்க