பல்லடத்தில் ஒரு டன் குட்கா பறிமுதல்: 2 போ் கைது
பல்லடத்தில் ஒரு டன் குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரைக் கைது செய்தனா்.
பல்லடம்- தாராபுரம் சாலையில் குட்கா கடத்தி வருவதாக கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, பல்லடம் காவல் உதவி ஆய்வாளா் சந்திரன் மற்றும் போலீஸாா் ஆலூத்துப்பாளையம் பிரிவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அவ்வழியே வந்த ஒரு வேனை நிறுத்தி விசாரித்தபோது ஓட்டுநா் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் 750 கிலோ குட்கா பொருள்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில், குட்கா கடத்தி வந்தது கா்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சோ்ந்த வீரேஷ் மகன் ஹேமந்த்குமாா் (26) என்பதும், இவா் இங்குள்ள கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக குட்கா கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் 750 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கும் பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். பின்னா் பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஹேமந்த்குமாரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருப்பூரில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனா்.
அதேபோல பல்லடம் திருவள்ளுவா் நகா் பகுதியில் குட்கா பொருள்களை விற்பனை செய்ததாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த வெங்கடேஸ்வரன் (28) என்பவரைக் கைது செய்து அவரிடமிருந்து 250 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனா்.