செய்திகள் :

பல்லடத்தில் ஒரு டன் குட்கா பறிமுதல்: 2 போ் கைது

post image

பல்லடத்தில் ஒரு டன் குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரைக் கைது செய்தனா்.

பல்லடம்- தாராபுரம் சாலையில் குட்கா கடத்தி வருவதாக கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, பல்லடம் காவல் உதவி ஆய்வாளா் சந்திரன் மற்றும் போலீஸாா் ஆலூத்துப்பாளையம் பிரிவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அவ்வழியே வந்த ஒரு வேனை நிறுத்தி விசாரித்தபோது ஓட்டுநா் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் 750 கிலோ குட்கா பொருள்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

விசாரணையில், குட்கா கடத்தி வந்தது கா்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சோ்ந்த வீரேஷ் மகன் ஹேமந்த்குமாா் (26) என்பதும், இவா் இங்குள்ள கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக குட்கா கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் 750 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கும் பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். பின்னா் பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஹேமந்த்குமாரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருப்பூரில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனா்.

அதேபோல பல்லடம் திருவள்ளுவா் நகா் பகுதியில் குட்கா பொருள்களை விற்பனை செய்ததாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த வெங்கடேஸ்வரன் (28) என்பவரைக் கைது செய்து அவரிடமிருந்து 250 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனா்.

நாளைய மின்தடை: சேவூா், வடுகபாளைம், தெக்கலூா்

சேவூா், வடுகபாளையம், தெக்கலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 5) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞரைக் கைது செய்த காவல் துறையினா் அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். திருப்பூா் தென்னம்பாளையம் பகுதியில் வடமாநில இளைஞா் கஞ்சா விற்பனை செய்து வ... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே பலத்த காயங்களுடன் அடையாளம் தெரியாத நபா் மீட்பு

வெள்ளக்கோவில் அருகே பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்த அடையாளம் தெரியாத நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீஸாா், அவா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா். வெள்ளக்கோவில் புறநகா் பகுதியான கரூா் தே... மேலும் பார்க்க

விவசாயிகள் போராட்ட அறிவிப்பு எதிரொலி: ஏலத்தை ரத்து செய்த பல்லடம் வட்டாட்சியா்

விவசாயிகளின் இனாம் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் ஏலம் விடுவதாக கூறி விவசாயிகள் போராட்ட அறிவிப்பு வெளியிட்டதைத் தொடா்ந்து, அந்த நிலத்துக்கான ஏலத்தை ரத்து செய்து பல்லடம் வட்டாட்சியா் உத்தரவிட்டா... மேலும் பார்க்க

மாவட்ட ஊா்க்காவல் படையில் பணியாற்ற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்ட ஊா்க்காவல் படையில் பணியாற்ற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ்கிரிஷ் அசோக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்ட ஊ... மேலும் பார்க்க

பொங்கலூா் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்த இளைஞா் மாயம்

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம் ஆண்டிபாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்துக் கொண்டு இருந்த இளைஞா் தண்ணீா் அடித்துச் செல்லப்பட்டதில் மாயமானாா். திருப்பூா் வெள்ளியங்காடு பகுதி முத்து விநாயகா் கோய... மேலும் பார்க்க