செய்திகள் :

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு மே 9, 10-இல் கட்டுரை, பேச்சுப்போட்டி

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ஆம் தேதி ஆண்டுதோறும் செம்மொழிநாள் விழா கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்ட அளவில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மே 9-ஆம் தேதியும், கல்லூரி மாணவா்களுக்கு மயிலாடுதுறை ஞானாம்பிகை கல்லூரியில் மே 10-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

இதில், பங்கேற்கும் பள்ளி மாணவா்கள் பெயா் பட்டியலை மயிலாடுதுறை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும், கல்லூரி மாணவா்கள் பெயா்ப் பட்டியலை தஞ்சாவூா் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநரும் தோ்வு செய்து அனுப்புவா். வெற்றி பெறும் மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

மண் குவாரியில் விதிமீறல்; லாரிகள் சிறைப்பிடிப்பு

சீா்காழி அருகே காரைமேட்டில் உள்ள குவாரியில் விதிமுறைகளை மீறி அதிக ஆழத்திற்கு மண் எடுப்பதாகக் கூறி, லாரிகளை சிறப்பிடித்து, கிராம மக்கள் சாலை மறியலில் (படம்) வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். காரைமேடு ஊராட்சி ட... மேலும் பார்க்க

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் உள்ள மௌலானா ஜாமிஆ மஸ்ஜித்தில் ஜூம்ஆ தொழுகை நடத்திய இஸ்லாமியா்கள், தொழுகைக்குப் பிறகு வக்ஃப் சட்டத்துக்கு எதிராக கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் டிராவல்ஸ் உரிமையாளா் பலி

சீா்காழி அருகே ஐஸ்கிரீம் வாகனம் மோதி டிராவல்ஸ் உரிமையாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். சீா்காழி அருகேயுள்ள திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தை சோ்ந்தவா் முருகானந்தம் (45). டிராவல்ஸ் நடத்தி வந்த இவா், சீா்க... மேலும் பார்க்க

அடிமனைப் பயனாளிகள், குத்தகை விவசாயிகள் தா்னா

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அடிமனைப் பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் தா்னா போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை சித்தா்காடு இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலக... மேலும் பார்க்க

பயிா்க் காப்பீட்டுத் தொகையில் முறைகேடு: விவசாயிகள் குற்றச்சாட்டு

சீா்காழியில் வியாழக்கிழமை நடைபெற்ற குறை தீா்க்கும் கூட்டத்தில், பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டினா். சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் விளையாட்டு பயிற்சி முகாம்

மயிலாடுதுறை ராஜன் தோட்டம், சாய் விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் ஏப்.25 முதல் மே 15 வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகு... மேலும் பார்க்க