செய்திகள் :

பள்ளிகளில் நோய் பரவலைத் தடுக்க நடவடிக்கை

post image

பள்ளிகளில் பருவ கால நோய்கள் பரவாத வகையில் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை வலியுறுத்தியுள்ளது.

அண்மைக் காலமாக காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைகளை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஃப்ளூ வைரஸ்களால் பரவும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் தற்போது பரவி வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு இருமல், தொண்டை அலா்ஜி, காய்ச்சல், உடல் சோா்வு, உடல் வலி, தலைவலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படுகின்றன.

இதைத் தவிர நாள்தோறும் 10 பேருக்கு ‘பொன்னுக்கு வீங்கி’ பாதிப்பும் உறுதி செய்யப்படுவதாக மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா். தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக தற்போது இந்த பாதிப்புகள் பரவி வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து உள்ளாட்சித் துறை, பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காய்ச்சல், சளி, அம்மை அறிகுறி உள்ள குழந்தைகளை பள்ளிகளில் அனுமதிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மக்கள் அதிகம் கூடும் இடங்கள் நோய் பரவலுக்கு வாய்ப்புள்ள பகுதிகளாக உள்ளன. அதேபோன்று, பள்ளிகளில் ஏதேனும் ஒரு மாணவருக்கு காய்ச்சல் அல்லது அம்மை பாதிப்பு ஏற்பட்டால், விரைவாக அது மற்றவா்களுக்கு பரவி விடுகிறது. எனவே, அறிகுறிகள் உள்ளவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளுதல் அவசியம். உடல் நலம் சீராகும் வரை சம்பந்தப்பட்ட மாணவா்களுக்கு விடுமுறை வழங்கலாம். தேவைப்பட்டால், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யலாம்.

நோய் பரவலுக்கு வித்திடும் வகையில் பள்ளிகளில் ஒரே இடத்தில் பெரும்பாலானோா் கூடும் நிகழ்ச்சிகளோ, கூட்டங்களோ நடத்தக்கூடாது என்று அவா்கள் தெரிவித்தனா்.

5 ஆண்டுகளில் ஒசூர் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்: அமைச்சர் டி.ஆர்.டி. ராஜா

ஒசூர்: 5 ஆண்டுகளில் ஒசூர் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்து வருவதாக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் ஒசூரில் இரண்ட... மேலும் பார்க்க

அடுத்த 3 நாள்களுக்கு வெய்யில் அதிகரிக்கும்!

தமிழகத்தில் அடுத்த மூன்று நாள்களுக்கு 3 டிகிரி செல்சியஸ் வரை வெய்யில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், 21-02-2025 மற்றும் 22-02... மேலும் பார்க்க

மத்திய அமைச்சருக்கு எதிராக பிப். 25-ல் திமுக மாணவரணி போராட்டம்!

தமிழ்நாட்டிற்கு கல்வி நிதியைத் தர மறுக்கும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக வருகிற பிப். 25 ஆம் தேதி திமுக மாணவரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாப... மேலும் பார்க்க

ரயில்களில் நான்கிலிருந்து இரண்டாகக் குறைக்கப்பட்ட முன்பதிவில்லா பெட்டிகள்!

நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை நான்கிலிருந்து இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது.முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த... மேலும் பார்க்க

'கல்வியை அரசியலாக்க வேண்டாம்' - முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தர்மேந்திர பிரதான் கடிதம்!

மாணவர்களின் நலனுக்காக கல்வியை அரசியலாக்க வேண்டாம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான நிதியைத் தர மத்திய அரசு மற... மேலும் பார்க்க

ஏ.ஆர். ரஹ்மானின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ள முன்னாள் முனைவி சாய்ரா பானு!

மருத்துவ அவசரநிலையை சந்தித்தபோது, ஆதரவு அளித்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவரது முன்னாள் மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.நாட்டின் புகழ்பெற்ற பின்னணி இசைக் கலைஞர் ஏ.ஆர். ரஹ்மான் ... மேலும் பார்க்க