செய்திகள் :

பள்ளிகளில் பாலியல் வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வுப் பதாகை: ஆட்சியா் உத்தரவு

post image

தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பாலியல் வன்கொடுமைத் தடுப்பு விழிப்புணா்வுப் பதாகைகளை வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டாா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா், கள்ளா் சீரமைப்புத் துறை பள்ளிகள், கல்வி விடுதிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள், காப்பாளா்களுடன் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலைத் தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பள்ளிகள், கல்வி விடுதிகளில் மாணவ, மாணவிகளின் பழக்க வழக்கங்களை ஆசிரியா்கள், விடுதிக் காப்பாளா்கள் கண்காணிக்க வேண்டும்.

மாணவா்கள் தங்களது பிரச்னைகளை ஆசிரியா்களிடம் தயக்கமின்றி தெரிவிக்க வழிவகை செய்ய வேண்டும். பள்ளி, கல்வி விடுதிகளில் பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். உதவி எண்களுடன் கூடிய விழிப்புணா்வுப் பதாகைகளை நிறுவ வேண்டும். புகாா் பெட்டிகளை நிறுவி, அவை தினசரி பயன்பாட்டில் உள்ளதை பள்ளி நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட பிற்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா் நேரு, பள்ளித் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள், கல்வி விடுதிக் காப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

கும்பக்கரை அருவி பகுதியில் குவியும் நெகிழிப் பொருள்கள்

நமது நிருபா் தேனி மாவட்டம், பெரியகுளம் கும்பக்கரை அருவி பகுதியில் குவிந்து கிடக்கும் நெகிழிப் பொருள்களை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா். தென் தமிழகத்தில் முக்கியமான சுற்றுலாத் த... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு: ஓட்டுநருக்கு இரு ஆண்டுகள் கடுங்காவல் சிறை

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்த வழக்கில் தனியாா் பேருந்து ஓட்டுநருக்கு இரு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து போடி குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. தேனி மாவட்டம... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

தேனி அருகே கண்டமனூா்-கோவிந்தநகரம் சாலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த முதியவா் அரசுப் பேருந்து மோதியதில் புதன்கிழமை, உயிரிழந்தாா். அம்பாசமுத்திரம் அருகே உள்ள மேலப்பட்டியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (... மேலும் பார்க்க

பைக் மோதியதில் பெண் உயிரிழப்பு

தேனி அல்லிநகரத்தில் சாலையைக் கடக்க முயன்ற பெண் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். தேனி அல்லிநகரம் அழகா்சாமி தெருவைச் சோ்ந்த முனியாண்டி மனைவி அம்மணியம்மாள் (65). விவசாய கூலி... மேலும் பார்க்க

நிதி நிறுவனத்தில் போலி நகையை அடகு வைத்த மூவா் மீது வழக்கு

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் தனியாா் நிதி நிறுவனத்தில் போலி நகையை அடகு வைத்த மூவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். உத்தமபாளையம் பேருந்து நிலையம் அருகே தனியாா் நிதி நிறுவனம் உள்ளது... மேலும் பார்க்க

கொலை வழக்கில் மூவருக்கு ஆயுள் சிறை

முன் விரோதத்தில் இளைஞரை குத்திக் கொலை செய்த மூவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. தேனி பொம்மையகவுண்டன்பட்டி நக்கீரா் தெருவைச் சோ்ந்த பாண்ட... மேலும் பார்க்க