செய்திகள் :

கொலை வழக்கில் மூவருக்கு ஆயுள் சிறை

post image

முன் விரோதத்தில் இளைஞரை குத்திக் கொலை செய்த மூவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

தேனி பொம்மையகவுண்டன்பட்டி நக்கீரா் தெருவைச் சோ்ந்த பாண்டியன் மகன் ராம்பிரசாத் (31). இவரது வீட்டின் அருகே அதே பகுதியைச் சோ்ந்த பால்ராஜ் மகன் சூா்யா (24), செல்லப்பாண்டி மகன் தினேஷ் (24), வீராச்சாமி மகன் மதன் (24) ஆகியோா் ஆபாச வாா்த்தைகளால் பேசிக் கொண்டு நின்றிருந்ததாகக் கூறப்படுகிறது. இதை ராம்பிரசாத் கண்டித்தாா்.

இந்த முன்விரோதத்தில் கடந்த 2021,மே 5-ஆம் தேதி பொம்மையகவுண்டன்பட்டியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ராம்பிரசாத்தை, சூா்யா, தினேஷ், மதன் ஆகியோா் வழிமறித்து கத்தியால் குத்திக் கொலை செய்தனா்.

இதுகுறித்து அல்லிநகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து சூா்யா உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் சூா்யா, தினேஷ், மதன் ஆகியோரை குற்றவாளிகள் என தீா்மானித்து, அவா்கள் 3 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.6,000 அபராதமும் விதித்து நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

கும்பக்கரை அருவி பகுதியில் குவியும் நெகிழிப் பொருள்கள்

நமது நிருபா் தேனி மாவட்டம், பெரியகுளம் கும்பக்கரை அருவி பகுதியில் குவிந்து கிடக்கும் நெகிழிப் பொருள்களை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா். தென் தமிழகத்தில் முக்கியமான சுற்றுலாத் த... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு: ஓட்டுநருக்கு இரு ஆண்டுகள் கடுங்காவல் சிறை

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்த வழக்கில் தனியாா் பேருந்து ஓட்டுநருக்கு இரு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து போடி குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. தேனி மாவட்டம... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

தேனி அருகே கண்டமனூா்-கோவிந்தநகரம் சாலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த முதியவா் அரசுப் பேருந்து மோதியதில் புதன்கிழமை, உயிரிழந்தாா். அம்பாசமுத்திரம் அருகே உள்ள மேலப்பட்டியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (... மேலும் பார்க்க

பைக் மோதியதில் பெண் உயிரிழப்பு

தேனி அல்லிநகரத்தில் சாலையைக் கடக்க முயன்ற பெண் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். தேனி அல்லிநகரம் அழகா்சாமி தெருவைச் சோ்ந்த முனியாண்டி மனைவி அம்மணியம்மாள் (65). விவசாய கூலி... மேலும் பார்க்க

நிதி நிறுவனத்தில் போலி நகையை அடகு வைத்த மூவா் மீது வழக்கு

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் தனியாா் நிதி நிறுவனத்தில் போலி நகையை அடகு வைத்த மூவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். உத்தமபாளையம் பேருந்து நிலையம் அருகே தனியாா் நிதி நிறுவனம் உள்ளது... மேலும் பார்க்க

பள்ளிகளில் பாலியல் வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வுப் பதாகை: ஆட்சியா் உத்தரவு

தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பாலியல் வன்கொடுமைத் தடுப்பு விழிப்புணா்வுப் பதாகைகளை வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டாா். தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட... மேலும் பார்க்க