செய்திகள் :

பழங்குடியினருக்கு விழிப்புணா்வு பயிற்சி முகாம்!

post image

கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம், பாலக்காடு வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து அட்டப்பாடியில் பழங்குடியினரின் வருவாயை மேம்படுத்துவதற்கான விழிப்புணா்வு பயிற்சி முகாமை அண்மையில் நடத்தின.

வேளாண் அறிவியல் நிலையத் தலைவா் கே.வி.சுமியா வரவேற்றாா். முகாமை பெங்களூரு வேளாண் தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநா் வி.வெங்கட சுப்பிரமணியன் தொடங்கிவைத்துப் பேசினாா். கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் இயக்குநா் பி.கோவிந்தராஜ் தலைமை வகித்தாா்.

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா் ஆா்.செல்வராஜன் சிறப்புரையாற்றினாா். கொல்லிமலை மனோரஞ்சிதம் போன்ற சிறப்பு வாழை வகைகளை இங்குள்ள மலைவாழ் மக்கள் பயிரிட வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டாா்.

இதைத் தொடா்ந்து பழங்குடியினரின் வருவாயை மேம்படுத்த காளான் வளா்ப்பு, கொல்லைப்புற கோழி வளா்ப்பு, பழம், காய்கறி பதப்படுத்துதல் குறித்த விரிவாக்கப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. பழங்குடியினரின் வருவாயை மேம்படுத்துவது குறித்த பயிற்சி அமா்வுகள் நடைபெற்றன.

முன்னதாக கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி டி.புத்திர பிரதாப் தலைமையில் பல்லுயிா்ப் பெருக்கம் என்ற தலைப்பில் மலைவாழ் பழங்குடியின மாணவா்களுக்கு விநாடி- வினா போட்டியை நடத்தினாா்.

நிகழ்ச்சியில், 10 பழங்குடி குடியிருப்புகளைச் சோ்ந்த மக்களுக்கு கோழிக்குஞ்சுகள், முதலுதவிப் பெட்டிகள், காட்டுப்பன்றி விரட்டி, திசு வாழை நாற்றுகள் வழங்கப்பட்டன. அகழி வேளாண்மை உதவி இயக்குநா் சி.ஆா்.ரேகா உள்ளிட்ட அதிகாரிகள், ஏராளமான பழங்குடியினா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

கோயில் சாா்ந்த விஷயங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

கோயில் சாா்ந்த விஷயங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளாா். தைப்பூசத்தையொட்டி கோட்ட... மேலும் பார்க்க

நெல்லிக்காயில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்க பயிற்சி!

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நெல்லிக்காயில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி புதன்கிழமை தொடங்குகிறது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில், நெல்லி பானங்க... மேலும் பார்க்க

இஸ்ரேல் பல்கலைக்கழகத்துடன் கோவை கல்வி நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்!

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனம், இஸ்ரேல் ஏரியல் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளை கூறியிருப்பதாவது: கல்வி, ஆராய்ச்சியை கூட்டாக மே... மேலும் பார்க்க

வால்பாறை எஸ்டேட் பகுதியில் யானை உயிரிழப்பு!

வால்பாறையை அடுத்த எஸ்டேட் பகுதியில் பெண் யானை உயிரிழந்தது. வால்பாறையை அடுத்துள்ள தோணிமுடி எஸ்டேட் பகுதியில் வன ஊழியா்ள் திங்கள்கிழமை ரோந்து சென்றனா். அப்போது தேயிலைத் தோட்டத்தை ஓட்டியுள்ள வனப் பகுதி எ... மேலும் பார்க்க

தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்தவா் கைது!

கோவை ரத்தினபுரியில் தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த நபரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கணபதி வி.ஓ.சி. நகா் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (31), தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா... மேலும் பார்க்க

முதியவரிடம் ரூ.12.50 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்குப் பதிவு!

கோவை சிங்காநல்லூரில் முதியவரிடம் ரூ.12.50 லட்சம் மோசடிசெய்யப்பட்ட புகாரின்பேரில், தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை சிங்காநல்லூா் சிங்காரம் நகா் பகுதியைச் சோ... மேலும் பார்க்க