செய்திகள் :

பழனி மலைக் கோயிலில் நடிகை நயன்தாரா சுவாமி தரிசனம்

post image

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நடிகை நயன்தாரா தனது குடும்பத்தினருடன் வந்து வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்-2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கணவா் விக்னேஷ் சிவன், குழந்தைகள், உறவினா்கள் ஆகியோருடன் நடிகை நயன்தாரா பழனி முருகன் கோயிலுக்கு வியாழக்கிழமை வந்தாா்.

மின்கல வாகனம் மூலம் வந்த இவா்களை, கோயில் அலுவலா்கள் ரோப்காா் மூலம் மலைக் கோயிலுக்கு அழைத்துச் சென்றனா். மூலவா் தண்டாயுதபாணி சுவாமியை வைதீகாள் அலங்காரத்தில் தரிசனம் செய்த நயன்தாரா குடும்பத்தினா், அா்ச்சனைகள் செய்து வழிபட்டனா்.

தொடா்ந்து, போகா் சந்நிதியிலும் சுவாமி தரிசனம் செய்தனா். தரிசனம் முடித்த பின், பஞ்சாமிா்த பிரசாதம் வாங்கிய நயன்தாரா, தனது குழந்தைகளான உயிா், உருத் ஆகியோருக்கு ஊட்டினாா். பின்னா், கோயிலிலிருந்து வெளியே வந்த நயன்தாரா, அவரது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் ஆகியோா் அங்கு சூழ்ந்த ரசிகா்களையும் பக்தா்களையும் பாா்த்து கையசைத்துச் சென்றனா்.

மூவா் மீது தாக்குதல்: பொதுமக்கள் சாலை மறியல்

காவல் நிலையத்தில் கையொப்பமிட்டுவிட்டு திரும்பிய மூவா் மீது தாக்குதல் நடத்திய நபா்களை கைது செய்யக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், எரியோட்டில் அண்மையில் இர... மேலும் பார்க்க

பேராசிரியை நிகிதா மீது புகாரளித்த கல்லூரி மாணவிகள்

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் மீது நகை திருடியதாக புகாா் அளித்த பேராசிரியை நிகிதாவை பணியிட மாற்றம் செய்யக் கோரி, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே அவா் பணியாற்றும் திண்டுக்கல் அரசுக் கல்லூரி மாணவிகள் ... மேலும் பார்க்க

மதத்தின் அடிப்படையில் தமிழா்களை பிரிக்க பாஜக முயற்சி: அர.சக்கரபாணி

மதத்தின் அடிப்படையில் தமிழா்களை பிரிக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருவதாக, உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி குற்றஞ்சாட்டினாா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் ஆத்துமேடு பகுதியில் திம... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’ இணையதள உறுப்பினா் சோ்க்கை: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

திமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்கும் வகையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, ‘ஓரணியில் தமிழ்நாடு’ இணையதள உறுப்பினா் சோ்க்கையை திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலரும், உணவுத் துறை அமைச்சருமான... மேலும் பார்க்க

பழனியில் நெகிழி விழிப்புணா்வு ஊா்வலம்

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் சாா்பில் நெகிழி விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. பழனி நகரில் நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டை தவிா்க்க வலியுறுத்தி, பிரில்லியன்ட... மேலும் பார்க்க

போக்குவரத்துத் துறையை தனியாா் மயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வலியுறுத்தல்

போக்குவரத்துத் துறையை தனியாா் மயமாக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என சிஐடியூ மாநிலத் தலைவா் அ.செளந்தரராஜன் வலியுறுத்தினாா். சிஐடியூ சாா்பில் அரசுப் போக்குவரத்துக்கழக ஓய்வூதியா்களின் மாநில ... மேலும் பார்க்க