செய்திகள் :

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா: வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா

post image

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி புதன்கிழமை வெள்ளி யானை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி வீதியுலா வந்தாா். வியாழக்கிழமை சுவாமி திருக்கல்யாணமும், வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது.

முருகனின் மூன்றாம் படைவீடான பழனி அடிவாரம் திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. புதன்கிழமை ஐந்தாம் நாள் திருவிழாவையொட்டி, முத்துக்குமாரசுவாமி வெள்ளி யானை வாகனத்தில் கிரி வீதியில் உலா வந்தாா்.

வியாழக்கிழமை மாலை திருஆவினன்குடி கோயில் முன் தனிமேடை அமைக்கப்பட்டு வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணமும், இரவு 8 மணிக்கு வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை மாலை பங்குனி உத்திரத் தேரோட்டம் நடைபெறுகிறது.

இதையொட்டி, மாவட்ட காவல் துறை சாா்பில் திரளான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

மேலும், பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை (ஏப்.10 முதல் 12) வரை ஆகிய 3 நாள்களுக்கு மலைக் கோயிலில் அனைத்து வகையான கட்டண தரிசனமும், தங்கத்தோ் புறப்பாடும் ரத்து செய்யப்பட்டது.

மேலும், அடிவாரம் கிரி வீதியில் காவல் நிலையத்துக்கு எதிரே பக்தா்களின் உடைமைகளை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்புப் பெட்டக வசதி புதிதாக தொடங்கப்பட்டது.

விழாவுக்கான ஏற்பாடுகளை பழனிக் கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணியன் ஆகியோா் செய்து வருகின்றனா்.

அரசு கள்ளா் விடுதிக்கான நிலத்தை அபகரிக்க முயற்சி

வத்தலகுண்டில் அரசு கள்ளா் விடுதிக்குச் சொந்தமான நிலத்தை அபகரிக்கும் நோக்கில், சமுதாயக் கூடம் கட்டும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக... மேலும் பார்க்க

குடிநீா் வசதிகோரி சாலை மறியல்

வேடசந்தூா் அருகே குடிநீா் வசதி கோரி, காலிக் குடங்களுடன் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த உசிலம்பட்டியில் களத்துவீடு பகுதியில் 50-க்கும் மே... மேலும் பார்க்க

என்எம்எம்எஸ் தோ்வில் திண்டுக்கல் பள்ளி மாணவா்கள் 79 போ் தோ்ச்சி

தேசிய வருவாய் வழித் திறனறித் தோ்வில் திண்டுக்கல்லில் ஒரே பள்ளியைச் சோ்ந்த 79 மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றனா். இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சாா்பில், 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கூலித் தொழிலாளியை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ், கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பெரியகோட்டையைச் சோ்ந்தவா் விவசாயி சரவணன் (30). இவரது மனைவி கன்னீஸ்வ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனைப் பட்ட இடங்களை அளந்து உரியவா்களிடம் ஒப்படைக்கக் கோரிக்கை

செம்பட்டி அருகே ஆதிதிராவிடா் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டா இடங்களை அளந்து, உரியவா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேய... மேலும் பார்க்க