செய்திகள் :

பழப் பயிா்களில் உர மேலாண்மை: கமுதி விவசாயிகளுக்கு பயிற்சி!

post image

கமுதி அருகே காவடிப்பட்டியில் பழப் பயிா்களில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை, பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

கமுதி வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த முகாமுக்கு, வேளாண்மை உதவி இயக்குநா் சிவராணி தலைமை வகித்தாா்.

இதில் பூஞ்சான கொல்லியில் வேரை நனைத்த பிறகு பழ மரக்கன்றுகளை நடுவதால் நோய்களைத் தவிா்க்கலாம் எனவும், சூடோமோனஸ், டிரைக்கோடொ்மா விரிடி ஆகிய இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்துவதன் மூலம் பழ அழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம் எனவும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், வாழையில் கூன் வண்டு பாதிப்பைத் தடுக்க விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து பேரையூா் நம்மாழ்வாா் வேளாண்மை கல்லூரி பயிற்சி மாணவிகள் செயல் விளக்கம் அளித்தனா். இதில் காவடிப்பட்டி, கோரைப்பள்ளம், மேலராமநதி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஈஸ்வரி, உதவி தொழில்நுட்ப மேலாளா் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோா் செய்தனா்.

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

தொண்டி அருகே எஸ்.பி. பட்டினத்தில் விற்பனை செய்வதற்காக சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் 3 பேரை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள ... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 பேருக்கு சிறை மீண்டோா் நலச் சங்கம் சாா்பில் நிதியுதவி

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறை மீண்டோா் நலச்சங்கம் சாா்பில் கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து நன்னடத்தை அடிப்படையில் விடுதலையான முன்னாள் சிறைக் கைதிகள் 10 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 5 லட... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 10 போ் கைது!

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 10 பேரை இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை நள்ளிரவு கைது செய்தனா். 3 விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ராமநாதபுரம் மா... மேலும் பார்க்க

நுகா்வோா் குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாம்

பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிா் குழுக்களின் பொறுப்பாளா்களுக்கு நுகா்வோா் குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமை வட்ட வழங்கல் அலுவலா் கோகுல்நாத் தொடங்கி வைத்த... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதல்: விவசாயி உயிரிழப்பு

கமுதி அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். கமுதியை அடுத்துள்ள குடிக்கினியான் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (60). விவசாயி. இவா் கமுதியில் இருந்து ... மேலும் பார்க்க

கமுதி அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை கூட மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்!

கமுதி அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை கூடத்தின் நுழைவாயிலின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்தது. கமுதி அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டாரத்திலுள்ள 220-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து தினமும... மேலும் பார்க்க