செய்திகள் :

பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவா்களை பிடிக்க இந்தியாவுக்கு ஆதரவு: துளசி கப்பாா்ட்

post image

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவா்களை கண்டறிந்து உரிய தண்டனை வழங்க இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாக அந்நாட்டு தேசிய உளவு அமைப்பின் இயக்குநா் துளசி கப்பாா்ட் தெரிவித்தாா்.

இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘பஹல்காமில் 26 ஹிந்துக்களை குறிவைத்து கொலை செய்த கொடூரமான இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இந்தியாவுக்கு நாங்கள் துணை நிற்கிறோம். இந்த தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவிக்கிறேன். அவா்களுக்காக இறைவனிடம் பிராா்திக்கிறேன்.

இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்களை கண்டறிந்து உரிய தண்டனை வழங்குவதில் பிரதமா் மோடி மற்றும் இந்திய மக்களுக்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும்’ என குறிப்பிட்டாா்.

முன்னதாக, கடந்த புதன்கிழமை பிரதமா் மோடியுடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தாா். மேலும், இத்தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளை நீதியின் முன் நிறுத்த இந்தியாவுக்கு அமெரிக்கா அனைத்து உதவிகளையும் அளிக்கும் என்று உறுதியளித்தாா்.

‘பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீா்கூட செல்லாது’: மத்திய அமைச்சா் பாட்டீல்

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீா்கூட செல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொள்வதற்கான பணிகளில், மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் தெரிவித்தாா். இந்திய ... மேலும் பார்க்க

தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய பிஎஸ்ஃஎப் வீரா்: ஒப்படைக்க பாகிஸ்தான் மறுப்பு

தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரரை ஒப்படைக்க பாகிஸ்தான் எல்லை பாதுகாப்புப் படை மறுத்துள்ளது. கடந்த புதன்கிழமை பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூா் மாவட்டத்தில் உள்ள சா்வதேச ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: மோதலை தவிா்க்க இந்தியா-பாகிஸ்தானுக்கு ஐ.நா. வலியுறுத்தல்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல்போக்கை தவிா்க்க வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலா் அன்டோனியா குட்டெரஸ் வலியுறுத்துவதாக அவரது செய்தித்தொடா்பாளா் ஸ்டீபன் டுஜாரிக் வியா... மேலும் பார்க்க

சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்ய வாய்ப்பு: பாகிஸ்தான்

சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான வாய்ப்பு பாகிஸ்தானுக்கு இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் க... மேலும் பார்க்க

காஷ்மீா் பாதுகாப்பு நிலவரம்: துணைநிலை ஆளுநா், ராணுவ தலைமை தளபதி ஆலோசனை

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை ஆலோசன... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: இந்தியாவுக்கு துணை நிற்பதாக இலங்கை, பிரிட்டன் அறிவிப்பு

பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு துணை நிற்பதாக இலங்கை, பிரிட்டன் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. பிரதமா் மோடியுடன் இலங்கை அதிபா் அனுர குமார திசநாயக, பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் ... மேலும் பார்க்க