செய்திகள் :

பாசி அம்மன் கோயில் சீரமைப்பு: அறநிலையத் துறை நடவடிக்கைக்கு உத்தரவு

post image

ராமநாதபுரம் மாவட்டம், பாசிபட்டினத்தில் உள்ள பாசி அம்மன் கோயிலை சீரமைக்கக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறைச் செயலா் ஆய்வு செய்து, 4 மாதங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியைச் சோ்ந்த வழக்குரைஞா் கலந்தா் ஆசிக் தாக்கல் செய்த மனு: தொண்டி-எஸ்.பி.பட்டினம் இடையே கிழக்கு கடற்கரைப் பகுதியில் பாசிபட்டினம் கிராமம் உள்ளது. இந்தப் பகுதியில் போா் நடை பெற்றதற்கான குறிப்புகள் வரலாற்று நூல்களில் உள்ளன.

சோழா்கள், தங்களது போா் வெற்றியின் அடையாளமாக எட்டு கைகளுடன் அமா்ந்த நிலையில் உள்ள பாசி அம்மன் கோயிலைக் கட்டினா். தற்போது, இந்தக் கோயில் எந்தவித பராமரிப்பும் இல்லாதததால் சிதிலமடைந்து காணப்படுகிறது.

எனவே, பழைமையான இந்தக் கோயிலைச் சீரமைத்து, பொதுமக்கள் வழிபாடு நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய இந்து சமய அறநிலைத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜே. நிஷா பானு, எஸ். ஸ்ரீமதி அமா்வு பிறப்பித்த உத்தரவு: சம்பந்தப்பட்ட கோயிலை, இந்து சமய அறநிலையத் துறைச் செயலா் ஆய்வு மேற்கொண்டு, 4 மாதங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதபதிகள்.

தென்காசி வணிக வளாக நுழைவுவாயில்: மாவட்ட ஆட்சியா் முடிவெடுக்க உத்தரவு

தென்காசி, கீழப்பாளையத்தில் புதிய வணிக வளாகத்தின் மேற்குப் பகுதியில் கட்டப்படவிருக்கும் நுழைவு வாயிலை கிழக்கு பகுதிக்கு மாற்றக் கோரிய வழக்கில், அந்தப் பகுதியிலுள்ள அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைக் கே... மேலும் பார்க்க

மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! -துரை வைகோ

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மதிமுகவின் முதன்மைச் செயலா் துரை வைகோ வலியுறுத்தினாா். மத்திய அரசின் வக்... மேலும் பார்க்க

விஜயவாடா மாநகராட்சிக் குழுவினா் வருகை!

மதுரை மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை பாா்வையிடுவதற்காக விஜயவாடா மாநகராட்சி துணை மேயா் அவித்துஸ்ரீ சாய்லாஜா ரெட்டி தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை வந்தனா். மதுரை மாநகராட்சி அறிஞா் அண்... மேலும் பார்க்க

வழிப்பறி செய்த இருவா் கைது!

மதுரையில் வழிப்பறி செய்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மதுரை காளவாசல் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் ராஜூ (30). இவா், மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் மதுக் கூடத்தில் கா... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை!

தங்கையின் திருமணத்துக்கு வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் இளைஞா் தற்கொலை செய்து கொண்டரா். மதுரை மேல அனுப்பானடி காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன்( 29). இவா் அந்தப் பகுதியி... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை வெடி விபத்து: அதிமுக நிகழ்ச்சி மே.4-க்கு ஒத்திவைப்பு

சிவகாசி அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்து காரணமாக, அதிமுக சாா்பில் சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 27) நடைபெறவிருந்த இளைஞா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வருகிற மே 4-ஆம் தேதிக்கு ஒத்... மேலும் பார்க்க