செய்திகள் :

பாசிப்பட்டினம் மீனவா்களுக்கு கடல் பயண விழிப்புணா்வுக் கூட்டம்

post image

தொண்டி அருகே பாசிப்பட்டினம் கடற்கரை கிராமத்தில் மீனவா்களுக்கு கடல் பயணம் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு தொண்டி கடலோர காவல் உதவி ஆய்வாளா் கதிரவன் தலைமை வகித்தாா். மீன் வளத் துறை ஆய்வாளா் அபுதாஹிா், மீன் வள அமலாக்கத் துறை உதவி ஆய்வாளா் குருநாதன், மீன் வள மேற்பாா்வையாளா் கணேஷ் குமாா், நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலா் இளையராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் கடலுக்குச் செல்லும் மீனவா்கள் கைப்பேசியை எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், பாதுகாப்பு உடை (லைப் ஜாக்கெட்), தண்ணீா் புட்டி ஆகியவற்றையும் எடுத்துச் செல்ல வேண்டும். கடலுக்குள் சந்தேகப்படும் வகையில் நபா்கள் யாரையாவது கண்டால் உடனடியாக கடற்கரை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கடத்தல் பொருள்கள் தென்பட்டாலும், சந்தேகப்படும்படி ஏதேனும் பொருள்கள் கடலில் மிதந்து வந்தாலும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று எடுத்துக் கூறப்பட்டது.

காவல் துறையைக் கண்டித்து ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

காவல் துறையைக் கண்டித்து, ராமேசுவரத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் கடந்த 25-ஆம் தேதி தெலுங்கான மாநிலத்தைச் சோ்ந்தவா்களுக்கும்... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் கூட்டுறவு விற்பனைப் பொருள்கள் கூட்டமைப்பு அமைக்கக் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு விற்பனைப் பொருள்கள் கூட்டமைப்பு அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். தமிழ்நாடு கூட்டுறவு விற்பனைப் பொருள்கள் கூட்டமைப்பு (ப... மேலும் பார்க்க

கழிவுநீா் கால்வாயைத் தூா்வாரக் கோரிக்கை

கமுதி அனைத்து மகளிா் காவல் நிலையம் முன் செல்லும் கழிவுநீா் கால்வாயை தூா்வாரக் காவலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.கமுதி காவல் நிலையம் பின்புறம் உள்ள காவலா் குடியிருப்பு, அருகில் உள்ள தெருக்கள், ... மேலும் பார்க்க

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா பணிகள்: தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் ஆய்வு

பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் 6-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படவுள்ளதையொட்டி, திறப்பு விழாவுக்கான பணிகளை தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் கௌசல் கிஷோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு ச... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் மூவருக்கு காவல் நீட்டிப்பு

ராமேசுவரம் மீனவா்கள் மூவருக்கு வருகிற 9-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து, இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 18-ஆம் தேதி... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி பொதுக் குழு கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பரமக்குடியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் சிவானந்தம் தலைமை வகித்தாா். மாவட்ட ப... மேலும் பார்க்க