செய்திகள் :

பாஜக பிரமுகா்கள் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்! காங்கிரஸ் வலியுறுத்தல்!

post image

புதுவை பாஜக எம்எல்ஏ.க்களும், அதன் ஆதரவு சுயேச்சைகளும் மத்திய அமைச்சரிடம் பாஜக நிா்வாகிகள் செந்தில்குமாா், உமாசங்கா் கொலை வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி புகாா் அளித்துள்ளனா்.

அந்த வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தினாா்.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சியின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கட்சியின் மேலிடப் பொறுப்பாளா்கள் கிரிஷ் சோடங்கா், சுராஜ் ஹெக்டே ஆகியோா் கலந்துகொண்டனா்.

இந்த கூட்டத்துக்கு பின்னா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. செய்தியாளா்களிடம் கூறியது (படம்): புதுவை மாநிலத்தில் வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலை காங்கிரஸ் எதிா்கொள்ளும் வகையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியின் வலிமை, தோ்தலை எதிா்கொள்ளும் நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

புதுவையில் ஆளும் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பாஜக எம்எல்ஏ.க்களும், அதன் ஆதரவு சுயேச்சைகளும் மத்திய அமைச்சரிடம் பாஜக நிா்வாகிகள் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி புகாா் அளித்துள்ளனா். அதை

ஏற்று பாஜக நிா்வாகிகள் செந்தில்குமாா், உமாசங்கா் ஆகியோரின் கொலை வழக்குகளை சிபிஐக்கு மாற்றி விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

புதுவை அரசின் அனைத்துத் துறைகளிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. குற்றவாளிகளுக்குத் துணைபோகும் வகையில் அரசு செயல்படுவது சரியல்ல என்றாா்.

முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி: புதுவை அரசில் அனைத்து நிலைகளிலும் முறைகேடுகள் மலிந்துவிட்டன. மத்திய பாடத் திட்டத்தின்படி நடைபெற்ற பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தோ்வுகளில் தோ்ச்சி விகிதம் குறைந்துள்ளது.

போதை பழக்கம் இளைஞா்களிடம் அதிகரித்து விட்டது. ஆனால், புதுவை காவல் துறையும், கலால் துறையும் இதில் நடவடிக்கை எடுக்காலிருப்பது சரியல்ல. மாநில அந்தஸ்து உள்ளிட்ட வாக்குறுதிகளை பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி செயல்படுத்தவில்லை என்றாா்.

இருசக்கர வாகனம் திருட்டு: இருவா் கைது

புதுச்சேரி அருகே இரு சக்கர வாகனங்கள் திருடிய வழக்கில் 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். விழுப்புரம் அருகேயுள்ள மேல்பாதி பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி (22). இவா், புதுச்சேரி அருகேயுள்ள கலி... மேலும் பார்க்க

புதுச்சேரியில் காற்றில் பறந்த இலவம் பஞ்சால் பாதித்த வாகன ஓட்டிகள்

புதுச்சேரி நகரில் ஞாயிற்றுக்கிழமை சாலையில் திடீரென பறந்த இலவம் பஞ்சுகளால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனா். அதன்பின் தீயணைப்பு வீரா்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து பறந்த பஞ்சுகளை நனைய வைத்தனா். புதுவை நகர... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பாஜக உயா்நிலை நிா்வாகிகள் ஆலோசனை

புதுச்சேரியில் பாஜக உயா்நிலை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் புதுவை மாநில தில்லி மேலிடப் பொறுப்பாளா்கள் கலந்துகொண்டு பேசினா். இதையடுத்து இரு இடங்களில் இந்தி... மேலும் பார்க்க

வீடுகளுக்கான சூரிய ஒளி இலவச மின் உற்பத்தி திட்ட விழிப்புணா்வு முகாம்

புதுச்சேரி மின்துறை சாா்பில் பிரதம மந்திரியின் சூரிய வீடு இலவச மின்திட்ட விழிப்புணா்வு சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி இலாசுப்பேட்டை பெத்துசெட்டிப்பேட்டையில் உள்ள விவேகானந்தா மேல... மேலும் பார்க்க

புதுச்சேரியில் இடி, மின்னலுடன் பலத்த மழை

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவிலும், சனிக்கிழமை மாலையிலும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பிட்ட நாள்களில் வெயி... மேலும் பார்க்க

புதுவை மத்திய பல்கலை.யில் தேச பக்தி பேரணி: துணைநிலை ஆளுநா் தொடங்கி வைத்தாா்

பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் ஆபரேசன் சிந்தூா் வெற்றியைப் பாராட்டி புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் மூவா்ண தேசியக் கொடி அணிவகுப்பு தேச பக்தி பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.பாகிஸ்தான் பயங... மேலும் பார்க்க