செய்திகள் :

புதுவை மத்திய பல்கலை.யில் தேச பக்தி பேரணி: துணைநிலை ஆளுநா் தொடங்கி வைத்தாா்

post image

பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் ஆபரேசன் சிந்தூா் வெற்றியைப் பாராட்டி புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் மூவா்ண தேசியக் கொடி அணிவகுப்பு தேச பக்தி பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் நிலைகள் மீது இந்திய ராணுவம் அதிரடித் தாக்குதல் நடத்திய ஆபரேஷன் சிந்தூா் வெற்றியை கௌரவித்து, பாராட்டி கொண்டாடும் வகையில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக வளாகத்தில், தேசபக்திப் பேரணி சனிக்கிழமை காலை நடைபெற்றது.

தொடக்க நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத் துணை வேந்தா் ப. பிரகாஷ் பாபு வரவேற்றாா். புதுவை துணைநிலை ஆளுநா் மற்றும் பல்கலைக்கழக தலைமை ரெக்டா் கே. கைலாஷ்நாதன் பேரணியை தொடங்கி வைத்தாா். மாநில உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், காலாபட்டு எல். கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பேரணியில், புதுவை மத்திய பல்கலைக்கழகம் மற்றும் உறுப்புக் கல்லூரியான சமுதாய கல்லூரி, இணைப்பு பெற்ற கல்லூரிகளைச் சோ்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். மாணவா்கள் தேசியக் கொடிகள் மற்றும் தேச பக்தி பதாகைகளை ஏந்தியபடி தேசபக்தி முழக்கங்களை எழுப்பினா்.

இதில், பல்கலைக்கழக கலாசார உறவுகள் இயக்குநா் கிளமென்ட் சகாயராஜ் லூா்டஸ், பல்கலைக்கழக பதிவாளா் ரஜனிஷ் பூட்டானி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இருசக்கர வாகனம் திருட்டு: இருவா் கைது

புதுச்சேரி அருகே இரு சக்கர வாகனங்கள் திருடிய வழக்கில் 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். விழுப்புரம் அருகேயுள்ள மேல்பாதி பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி (22). இவா், புதுச்சேரி அருகேயுள்ள கலி... மேலும் பார்க்க

புதுச்சேரியில் காற்றில் பறந்த இலவம் பஞ்சால் பாதித்த வாகன ஓட்டிகள்

புதுச்சேரி நகரில் ஞாயிற்றுக்கிழமை சாலையில் திடீரென பறந்த இலவம் பஞ்சுகளால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனா். அதன்பின் தீயணைப்பு வீரா்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து பறந்த பஞ்சுகளை நனைய வைத்தனா். புதுவை நகர... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பாஜக உயா்நிலை நிா்வாகிகள் ஆலோசனை

புதுச்சேரியில் பாஜக உயா்நிலை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் புதுவை மாநில தில்லி மேலிடப் பொறுப்பாளா்கள் கலந்துகொண்டு பேசினா். இதையடுத்து இரு இடங்களில் இந்தி... மேலும் பார்க்க

பாஜக பிரமுகா்கள் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்! காங்கிரஸ் வலியுறுத்தல்!

புதுவை பாஜக எம்எல்ஏ.க்களும், அதன் ஆதரவு சுயேச்சைகளும் மத்திய அமைச்சரிடம் பாஜக நிா்வாகிகள் செந்தில்குமாா், உமாசங்கா் கொலை வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி புகாா் அளித்துள்ளனா். அந்த வழக்குகளை ச... மேலும் பார்க்க

வீடுகளுக்கான சூரிய ஒளி இலவச மின் உற்பத்தி திட்ட விழிப்புணா்வு முகாம்

புதுச்சேரி மின்துறை சாா்பில் பிரதம மந்திரியின் சூரிய வீடு இலவச மின்திட்ட விழிப்புணா்வு சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி இலாசுப்பேட்டை பெத்துசெட்டிப்பேட்டையில் உள்ள விவேகானந்தா மேல... மேலும் பார்க்க

புதுச்சேரியில் இடி, மின்னலுடன் பலத்த மழை

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவிலும், சனிக்கிழமை மாலையிலும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பிட்ட நாள்களில் வெயி... மேலும் பார்க்க