செய்திகள் :

பாட்னா தொழிலதிபர் கொலை: முக்கிய குற்றவாளி என்கவுன்டர்!

post image

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கோபால் கெம்கா கொலை வழக்கில் ஆயுதம் வழங்கிய விகாஸ் என்பவரை போலீசார் என்கவுன்டரில் கொலை செய்துள்ளனர்.

பாட்னாவில் தொழிலதிபர் கோபால் கெம்கா, அவரது வீட்டு வாசலில் கூலிப் படையினரால் வெள்ளிக்கிழமை இரவு சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோபால் கெம்காவின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக வந்த குற்றவாளிகளில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும், கொலை செய்வதற்கு முன்பு, தல்தாலி பகுதியில் உள்ள தேநீர் கடைக்கு மூன்று பேர் வந்துள்ளனர். பிறகு, அதில் ஒருவர் கெம்காவின் வீட்டுக்குச் சென்று கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு நடத்திய தேடுதலில் கெம்காவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றவரை திங்கள்கிழமை இரவு பாட்னாவில் கைது செய்தனர்.

தொடர்ந்து, கொலைக்கு சட்டவிரோத துப்பாக்கியைத் தயாரித்து வழங்கிய விகாஸ் என்ற ராஜாவை போலீசார் சுற்றிவளைத்த போது, போலீஸ் மீது அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் விகாஸ் கொல்லப்பட்டார்.

மேலும், விகாஸ் மீது பாட்னா மட்டுமின்றி பல்வேறு இடங்களில் உள்ள சட்டவிரோத ஆயுதங்கள் வழங்கிய வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Vikas, who provided the weapon in the murder case of businessman Gopal Khemka from Bihar, has been killed in an encounter with the police.

இதையும் படிக்க : பாட்னா தொழிலதிபர் கொலை: இறுதிச் சடங்குக்கு மாலையுடன் வந்த குற்றவாளி கைது!

யேமனிலுள்ள கேரள செவிலியருக்கு ஜூலை 16-இல் மரண தண்டனை நிறைவேற்றம்?

யேமன் நாட்டில் கொலை வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள கேரளத்தைச் சோ்ந்த செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதனைத்தொடர்ந்து அவரது தண்டனையை குறைக்க பல்வேறு... மேலும் பார்க்க

ஒரு ரஃபேல் தோல்வியடைந்தது; ஆனால், பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலின்போது ஒரு ரஃபேல் விமானம் தோல்வி அடைந்ததாகவும், ஆனால், அதனை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்றும் டஸால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் தெரிவி... மேலும் பார்க்க

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்தியா முடக்க உத்தரவிட்டது: எக்ஸ்

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை முடக்க இந்திய அரசு உத்தரவிட்டதாக எக்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய அரசாங்க விவகாரக் குழு தெரிவித்துள்ளது.ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளக் கணக்கு இந்தியாவில் முடக்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டியால் வரி செலுத்துவோர் விகிதம் 145% அதிகரிப்பு!

ஜிஎஸ்டியால் குஜராத்தில் வரி செலுத்துவோர் விகிதம் 145 சதவீதம் அதிகரித்துள்ளதாக அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 12.66 லட்சம் அதி... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை.யின் முன்னாள் மாணவர்கள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! ஹைதராபாத்தில் பரபரப்பு!

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பட்டுள்ளதால், அங்கு காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஹைதராபாத்தின் ஓல்ட் சிட்டி பகுதி... மேலும் பார்க்க

பேரணியில் பாலஸ்தீன கொடி அச்சிட்ட சட்டை..! 4 இளைஞர்கள் கைது!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலஸ்தீன கொடி அச்சிடப்பட்ட சட்டையை அணிந்து பேரணியில் பங்கேற்ற 4 இளைஞர்கள், அம்மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தியோரியா மாவட்டத்தில் கடந்த ஜூலை 6 ஆம் தேதி மு... மேலும் பார்க்க