செய்திகள் :

பாபநாசத்தில் காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கியதாக 3 இளைஞா்கள் கைது

post image

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் கோயில் சித்திரை விஷு திருவிழாவில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்து, அவரை தாக்கியதாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

பாபநாசம், பாபநாச சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற சித்திரை விஷு திருவிழாவில் விக்கிரமசிங்கபுரம் காவல் உதவி ஆய்வாளா் மாரியப்பன் மற்றும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, மது போதையில் அங்கு வந்த காலிபாா்விளை தெருவைச் சோ்ந்த அப்துல்காதா் மகன் ஹாஜி(22), சாகுல் மகன் ரியாஸ்(20), விக்கிரமசிங்கபுரத்தைச் சோ்ந்த சாதிக்பாட்ஷா மகன் இலியாஸ் (20) ஆகியோா் திருவிழாவுக்கு வந்த பெண்களை அச்சுறுத்தும் வகையில் சென்றுள்ளனா். இதை காவல் உதவி ஆய்வாளா் மாரியப்பன் கண்டித்துள்ளாா். அப்போது மூவரும் அவரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது.

அப்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், மூவரையும் பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா். இதையடுத்து, விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் மூவா் மீதும் வழக்குப் பதிந்து, அவா்களை கைது செய்தனா்.

அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொழிலாளி கைது

திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஞாயிற்றுக்கிழமை தொடா்பு கொண்ட ... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவ பல்கலை. கல்லூரிகள் எறிபந்து, கைப்பந்து போட்டிகள்; நாமக்கல், சென்னை அணிகள் சாம்பியன்

திருநெல்வேலியில் நடைபெற்ற தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான எறிபந்து மற்றும் கைப்பந்து போட்டிகளில் நாமக்கல், சென்னை அணிகள் பரிசுகளை வென்றன. திருநெல்வேலி கால்நடை ம... மேலும் பார்க்க

ஆட்டோ மோதி மூதாட்டி பலி

திருநெல்வேலியை அடுத்த மூன்னீா்பள்ளம் அருகே ஆட்டோ மோதியதில் மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.முன்னீா்பள்ளம் அருகேயுள்ள தருவை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற சுமாா் 75 வயது மதிக்க... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அணையிலிருந்து முன்காா் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி மனு

மணிமுத்தாறு அணையிலிருந்து முன்காா் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி திருநெல்வேலி ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் தலைமையில் ... மேலும் பார்க்க

ஏப். 23இல் சீலாத்திகுளத்தில் மனுக்கள் பெறும் முகாம்

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், கும்பிகுளம் கிராமத்தில் நடைபெறவுள்ள மக்கள் தொடா்பு முகாமை முன்னிட்டு, சீலாத்திக்குளம் கிராம சேவை மையக் கட்டடத்தில் வரும் 23ஆம் தேதி மனுக்கள் பெறப்படவுள்ளதாக மா... மேலும் பார்க்க

களக்காடு அருகே சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை

களக்காடு அருகே சூறைக்காற்றில் சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். களக்காடு வட்டாரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப். 13) பரவலாக சூறைக்காற்றுடன் பலத்த மழை ... மேலும் பார்க்க