செய்திகள் :

பாம்பு ஏன் தனது தோலை உரிக்கிறது தெரியுமா? - ஆச்சர்யப் பின்னணி

post image
பாம்பு தனது தோலை உரிக்கும் போது அவற்றைப் பார்த்தால் கொத்துமென்று கேள்விப்பட்டிருப்போம். அது உண்மையா? எதற்காக இவ்வாறு பாம்பு தன் தோலை உரித்துக் கொள்கின்றன என்பது குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.

மனிதர்களிடமும் தோல் உரியும், தினமும் குளிப்பதால் தோல் உரிவதைக் கவனித்திருக்க மாட்டார்கள் பாம்புகளில் பழைய தோல் உரிந்து புதிய தோல் வருவது ஒரே நேரத்தில் நடைபெறுவதால் அது தெரிகிறது என்று பேராசிரியர் மஞ்சுலா பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

பாம்பு தோலை உரிப்பது எப்படி?

தோல் பழையதாகும் போது பாம்பு அசௌகரியமாக உணரும். உடனே தோலை அகற்ற வேண்டும் என்று நினைக்கும்போது ஒரு சொரசொரப்பான இடத்தில் தனது தலையைத் தேக்குமாம். அப்போது தோலில் விரிசல் உண்டாகும் இதனையடுத்து பாம்பு தனது பழைய தோலை உரித்து தன் உடலை வெளியே கொண்டு வருகிறது.

மனிதர்கள் எப்படி வளர்ந்துகொண்டே இருக்கிறார்களோ அதே போல் பாம்பும் உயிர்வாழும் வரை சிறிது சிறிதாக வளர்த்துக்கொண்டே இருக்கும். அப்படி வளரும் போது தோல் இறுக்கமாவதைத் தொடர்ந்து அதனைத் தன் உடம்பிலிருந்து உரித்துக்கொள்ளுமாம். தோல் உரிக்காத பாம்பு வகைகள் இந்த உலகில் இல்லை என்று கூறுகிறார் பேராசிரியர்.

இவ்வாறு தோலை உரித்துக்கொள்வது பாம்புகளை நுண்ணுயிரிகள் மற்றும் மாசுகளில் இருந்து பாதுகாக்க உதவுவதாக அவர் தெரிவிக்கிறார்.

தோல் உரிக்கும்போது அதைப் பார்த்தால் பாம்பு தாக்குமா?

பாம்பு தன் உடலில் உள்ள பழைய தோலை உரித்து புதிய தோலுக்கு மாறும்போது அசௌகரியமாக உணரும். அதற்காக ஒரு இருட்டான இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும், அப்போது அவற்றை யாராவது தொந்தரவு செய்ய நேர்ந்தால் அப்போது அது தாக்கும் என்கின்றனர் வன உயிரியல் ஆய்வாளர்கள்.

கோவை: 6 ஆண்டுகளுக்குப் பிறகு தடாகம் பகுதிக்கு வந்த சின்னத்தம்பி யானை!

கோவை தடாகம், ஆனைக்கட்டி, மருதமலை சுற்றுவட்டார பகுதிகளில் உலா வந்த சின்னத்தம்பி என்ற காட்டு யானை மக்களிடம் நன்கு பிரபலம். அதன் சேட்டைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதேநேர... மேலும் பார்க்க

காங்கேயம் கால்நடைக்கான அழகுப் போட்டி: ஈரோட்டில் பார்வையாளர்களை கவர்ந்த காளைகள்!

காங்கேயம் கால்நடைக்கான அழகுப் போட்டிகாங்கேயம் கால்நடைக்கான அழகுப் போட்டிகாங்கேயம் கால்நடைக்கான அழகுப் போட்டிகாங்கேயம் கால்நடைக்கான அழகுப் போட்டிகாங்கேயம் கால்நடைக்கான அழகுப் போட்டிகாங்கேயம் கால்நடைக்க... மேலும் பார்க்க

நாகர்கோவில்: குப்பைக் கிடங்கில் தீ... சாலையில் புகை; மூச்சுத்திணறி மக்கள் கடும் அவதி..| Photo Album

நாகர்கோவில் மாநகராட்சியில் குப்பைக் கிடங்கில் தீ..நாகர்கோவில் மாநகராட்சியில் குப்பைக் கிடங்கில் தீ.. மேலும் பார்க்க

1 கி.மீக்கு 50 பைசா தான் செலவு - கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய ஹைட்ரஜன் வாகனம்

கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் ‘ரெநியூ’ (ReNew) என்ற மாணவர் குழு உள்ளது. இவர்கள் கத்தார் நாட்டில் நடைபெற உள்ள 'ஷெல் இக்கோ-மாரத்தான் - ஆசியா பசிபிக் 2025' எனும் சர்வதேச அளவிலான போட்டியில் இந்த... மேலும் பார்க்க

வயநாடு: ஒரே நாளில் மூன்று புலிகள் உயிரிழந்த பரிதாபம்; வனத்துறையின் பதில் என்ன?

வனப்பரப்பும் வனவிலங்குகளும் நிறைந்த கேரள மாநிலத்தின் வயநாட்டில் மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்களும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முறையற்ற வளர்ச்சிப் பணிகளின்... மேலும் பார்க்க