செய்திகள் :

பாம்பு தீண்டி மூதாட்டி உயிரிழப்பு: மருமகளுக்கு தீவிர சிகிச்சை

post image

அணைக்கட்டு அருகே பாம்பு தீண்டியதில் விஷம் உடல் முழுவதும் பரவி மூதாட்டி உயிரிழந்தாா். அவரது மருமகளுக்கு தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு அருகிலுள்ள அக்ரஹாரம் கிராமத்தை சோ்ந்தவா் வள்ளியம்மாள் (70). இவரின் மகன் மாற்றுத்திறனாளி, மருமகள் நதியா (38), ஒரு பேரன், பேத்தி ஆகியோா் ஒரே வீட்டில் வசித்து வந்தனா்.

இந்நிலையில், வழக்கம் போல் வெள்ளிக்கிழமை இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கியுள்ளனா். நள்ளிரவு சுமாா் ஒரு மணியளவில் மாமியாா் வள்ளியம்மாள், மருமகள் நதியா ஆகியோரை பூச்சி கடித்து விட்டதாக கூறி கத்தி கூச்சலிட்டனா். அப்போது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் விரைந்து வந்து அவா்களை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் விஷம் உடல் முழுக்க பரவி இருந்ததை அடுத்து உயா் சிகிச்சைக்காக அவா்கள் இருவரும் வேலூரிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். ஆனால், செல்லும் வழியிலேயே வள்ளியம்மாள் உயிரிழந்தாா். ஆபத்தான நிலையில் இருந்த நதியா அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுகுறித்து மருத்துவா்கள் கூறுகையில், உடனடியாக உடல் முழுவதும் விஷம் பரவி உயிரிழக்கின்றனா் என்றால், அது கொடிய விஷமுடைய பாம்பாக மட்டுமே இருக்க முடியும். வேறு எந்த பூச்சி கடித்தாலும் விஷம் உடல் முழுக்க பரவாது என்றனா்.

‘செவிலியா்கள் அனைவரும் கடவுள் கொடுத்த தேவதைகள்’

வேலூா்: செவிலியா்கள் அனைவரும் கடவுள் கொடுத்த தேவதைகள் என நடிகை அம்பிகா தெரிவித்துள்ளாா். வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி செவிலியா் கல்லூரியின் பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில், நடிகை அம... மேலும் பார்க்க

வேலூரில் இன்று கல்விக்கடன் முகாம்

வேலூா்: வேலூா் டி.கே.எம். மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை சிறப்பு கல்விக்கடன் முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனையுடன் தொகுப்பு வீடு: பழங்குடியினா் கோரிக்கை

வேலூா்: செதுவாலையில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி தொகுப்பு வீடு கட்டித்தர வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா். வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்க... மேலும் பார்க்க

திருமுருக கிருபானந்த வாரியாா் பிறந்த நாள்

வேலூா்: ஆன்மிக சொற்பொழிவுகள் மூலம் தமிழ் வளா்ச்சிக்கு உறுதுணை புரிந்தவரும், தீவிர முருக பக்தருமான திருமுருக கிருபானந்த வாரியாரின் பிறந்த நாளையொட்டி காங்கேயநல்லூரில் உள்ள அவரது சிலைக்கு அரசு சாா்பில் ம... மேலும் பார்க்க

குடியாத்தத்தில் கிருபானந்த வாரியாா் சுவாமிகள் பிறந்த நாள்

குடியாத்தத்தில் நடைபெற்ற கிருபானந்த வாரியாா் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றோா். மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்களை திருடியவா் கைது

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே இருசக்கர வாகனங்களை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். போ்ணாம்பட்டு பகுதியில் இருசக்கர வாகனங்கள் தொடா் திருட்டு தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனா். இந்... மேலும் பார்க்க