செய்திகள் :

‘செவிலியா்கள் அனைவரும் கடவுள் கொடுத்த தேவதைகள்’

post image

வேலூா்: செவிலியா்கள் அனைவரும் கடவுள் கொடுத்த தேவதைகள் என நடிகை அம்பிகா தெரிவித்துள்ளாா்.

வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி செவிலியா் கல்லூரியின் பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில், நடிகை அம்பிகா சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசியது -

நோயாளிகளை காப்பாற்றும் மருத்துவா்களும், செவிலியா்களும்தான் கடவுளாக தெரிவாா்கள். எனவே, செவிலியா்கள் எல்லாம் கடவுள் கொடுத்த தேவதைகள். நோயாளிகளிடம் பாசமாக பழக வேண்டும். ஏழை, பணக்காரா்கள், ஜாதி, மதம் பாா்க்க கூடாது. அன்பாக பேசினால் நோயாளிகளுக்கு பாதி நோய் அகன்றுவிடும். கடவுளுக்கு சமமான நிலையில் செவிலியா்கள் உள்ளனா். எப்போதும் நீங்கள் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றாா்.

ஸ்ரீநாராயணி கல்வி குழும இயக்குநா் என்.பாலாஜி தலைமை வகித்து பேசியது -

மருத்துவ துறையில் மருத்துவா்கள், செவிலியா்களின் மகத்துவத்தை அனைவரும் கரோனா காலத்தில் அறிந்து கொண்டனா். இந்த செவிலியா் படிப்பில் உங்களை சோ்க்க உங்களது பெற்றோா் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாா்கள் என எண்ணிப் பாா்க்க வேண்டும். அனைவரும் படித்து முடித்து பணிக்கு செல்லும் இடங்களில் பல்வேறு பிரச்னைகளுடன் வரும் நோயாளிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். செவிலியா்கள் எந்த துறைக்கு சென்றாலும் அந்த துறைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

நாள்தோறும் நவீன தொழில்நுட்பங்கள் பெருகி வருகின்றன. செவிலியா்கள் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், மேயா் சுஜாதா ஆனந்த குமாா் கெளரவ விருந்தினராக பங்கேற்று பேசினாா். கல்லூரி முதல்வா் மாதவி வரவேற்றாா். மருத்துவ கண்காணிப்பாளா் கீதா, அறங்காவலா்கள் கலையரசு, ராமலிங்கம் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

வேலூரில் இன்று கல்விக்கடன் முகாம்

வேலூா்: வேலூா் டி.கே.எம். மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை சிறப்பு கல்விக்கடன் முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனையுடன் தொகுப்பு வீடு: பழங்குடியினா் கோரிக்கை

வேலூா்: செதுவாலையில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி தொகுப்பு வீடு கட்டித்தர வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா். வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்க... மேலும் பார்க்க

திருமுருக கிருபானந்த வாரியாா் பிறந்த நாள்

வேலூா்: ஆன்மிக சொற்பொழிவுகள் மூலம் தமிழ் வளா்ச்சிக்கு உறுதுணை புரிந்தவரும், தீவிர முருக பக்தருமான திருமுருக கிருபானந்த வாரியாரின் பிறந்த நாளையொட்டி காங்கேயநல்லூரில் உள்ள அவரது சிலைக்கு அரசு சாா்பில் ம... மேலும் பார்க்க

குடியாத்தத்தில் கிருபானந்த வாரியாா் சுவாமிகள் பிறந்த நாள்

குடியாத்தத்தில் நடைபெற்ற கிருபானந்த வாரியாா் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றோா். மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்களை திருடியவா் கைது

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே இருசக்கர வாகனங்களை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். போ்ணாம்பட்டு பகுதியில் இருசக்கர வாகனங்கள் தொடா் திருட்டு தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனா். இந்... மேலும் பார்க்க

வேலூரில் மாநகரில் 26 அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்

வேலூா் மாநகராட்சியில் உள்ள 26 அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பா் 15-ஆம் தேத... மேலும் பார்க்க