செய்திகள் :

பாரதியார் பல்கலை.க்குள் புகுந்த சிறுத்தை! மாணவர்கள் வெளியேற்றம்!

post image

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்துக்குள் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது.

உடனடியாக பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, வளாகத்தில் இருந்த மாணவர்களை வெளியேற்றி பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்துள்ளனர்.

இதையும் படிக்க : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 58 கட்சிகள் பங்கேற்பு! யார்யார்?

கோவை மாவட்டத்தில் மருதமலை செல்லும் சாலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பாரதியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

இந்த நிலையில், பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக இன்று காலை விளையாட்டுப் பயிற்சிக்கு மைதானத்துக்கு வருகை தந்த மாணவர்கள் தகவல் அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்துக்கு வருகைதந்த கோவை சரக வனத்துறையினர் சிறுத்தையில் கால்தடத்தை உறுதி செய்துள்ளனர்.

உடனடியாக சிறுத்தையை பிடிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். கேமிராக்கள், கூண்டுகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்துக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், விளையாட்டுப் போட்டிக்காக பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்துள்ள மாணவர்களை விடுதியில் பாதுகாப்பாக தங்கவைத்துள்ளனர்.

இதனிடையே, பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த விளையாட்டுப் போட்டிகள் உள்பட அனைத்து நிகழ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களாட்சி பெயரில் மன்னா் ஆட்சி- ஆா்.பி. உதயகுமாா்

தமிழகத்தில் மக்களாட்சி எனக் கூறி கொண்டு மன்னராட்சி நடக்கிறது என தமிழக சட்டப்பேரவை எதிா்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா். செங்கோட்டையில் அண்ணாதொழிற்சங்கம் சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்களுக்... மேலும் பார்க்க

புதுக்கோட்டைக்கு மார்ச் 10-ல் உள்ளூர் விடுமுறை!

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மார்ச் 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, இந்த விடுமுற... மேலும் பார்க்க

3 நாள்கள் ட்ரோன் பயிற்சி: தமிழக அரசு ஏற்பாடு!

தமிழக அரசின் சார்பில் சென்னையில் வருகிற மார்ச் 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை ட்ரோன் பயிற்சி வழங்கப்படவுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பா... மேலும் பார்க்க

குடும்ப அட்டையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமா? அரிய வாய்ப்பு!

குடும்ப அட்டையில் திருத்தம் மேற்கொள்வதற்காக சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகின்ற மார்ச். 8 ஆம் தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக... மேலும் பார்க்க

நீதிமன்றத்தை அவமதிக்கும் தமிழக அரசு: நீதிபதி அதிருப்தி

நீதிமன்ற உத்தரவுகளை தமிழக அரசு அவமதிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது.பணியிடை நீக்கம் செய்யப்பட்டவருக்கு பணப்பலன்கள் கோருவது தொடர்பான வழக்கு, இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அ... மேலும் பார்க்க

மாநிலங்களை ஒருங்கிணைத்து ’கூட்டு நடவடிக்கைக் குழு’: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!

மாநிலங்களை ஒருங்கிணைத்து“கூட்டு நடவடிக்கைக் குழு” அமைக்கப்படும் எனமுதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கட்சி வேறுபாடுகளைக் களைந்து ஒரே குரலாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்துக் கட்சிகள... மேலும் பார்க்க