மணிப்பூரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் -கட்டடங்களில் விரிசல்; மக்கள் பீதி
பாரதியார் பல்கலை.க்குள் புகுந்த சிறுத்தை! மாணவர்கள் வெளியேற்றம்!
கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்துக்குள் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது.
உடனடியாக பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, வளாகத்தில் இருந்த மாணவர்களை வெளியேற்றி பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்துள்ளனர்.
இதையும் படிக்க : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 58 கட்சிகள் பங்கேற்பு! யார்யார்?
கோவை மாவட்டத்தில் மருதமலை செல்லும் சாலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பாரதியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
இந்த நிலையில், பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக இன்று காலை விளையாட்டுப் பயிற்சிக்கு மைதானத்துக்கு வருகை தந்த மாணவர்கள் தகவல் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்துக்கு வருகைதந்த கோவை சரக வனத்துறையினர் சிறுத்தையில் கால்தடத்தை உறுதி செய்துள்ளனர்.
உடனடியாக சிறுத்தையை பிடிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். கேமிராக்கள், கூண்டுகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பல்கலைக்கழகத்துக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், விளையாட்டுப் போட்டிக்காக பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்துள்ள மாணவர்களை விடுதியில் பாதுகாப்பாக தங்கவைத்துள்ளனர்.
இதனிடையே, பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த விளையாட்டுப் போட்டிகள் உள்பட அனைத்து நிகழ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.