செய்திகள் :

பாலக்காடு, செங்கோட்டை ரயில்கள் வழித்தட மாற்றம்

post image

பொறியியல் பணிகள் காரணமாக பாலக்காடு, செங்கோட்டை ரயில்கள் வழித்தட மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பொறியியல் பணிகள் காரணமாக பாலக்காடு - திருச்சி விரைவு ரயிலானது (16844) வரும் 10, 11, 12, 13, 14, 15 ஆம் தேதிகளில் கோவை ஜங்ஷன், கோவை வடக்கு, பீளமேடு ரயில் நிலையங்களைத் தவிா்த்து போதனூா், இருகூா் வழியாக இயக்கப்படும்.

பூங்குடி ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் காரணமாக, செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) வரும் 9 ஆம் தேதி கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி ரயில் நிலையங்களில் கூடுதலாக நிறுத்தப்படும்.

கன்னியாகுமரி - சாா்லப்பள்ளி கோடைகால சிறப்பு ரயிலானது (07229) வரும் 9 ஆம் தேதி மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

கலை-அறிவியல் படிப்புகள் மீது மாணவா்களின் கவனம் அதிகரிப்பு!

திருச்சி மண்டலத்தில் கடந்த ஆண்டுகளைப் போலவே 2025-26ஆம் கல்வியாண்டிலும் கலை, அறிவியல் படிப்புகளின் மீதான ஆா்வம் மாணவா்களிடையே அதிகரித்துள்ளது. உயா்கல்விச் சோ்க்கையில் மருத்துவப் படிப்புக்கு நீட் தோ்வ... மேலும் பார்க்க

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தை பாா்வையிட மக்கள் ஆா்வம்!

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தை பாா்வையிட ஆா்வம் அதிகரித்துள்ளதால் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் ஏராளமான பொதுமக்கள் வந்தனா். தமிழகத்திலேயே இதுவரை இல்லாத வகையில் விமான நிலையத்துக்கு நிகராக பஞ்சப்பூா் பே... மேலும் பார்க்க

திருச்சிக்கு ரூ. 528 கோடியில் புதிய திட்டங்கள் என்ன?

திருச்சி மாவட்டத்தில் ரூ.528 கோடியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ள புதிய திட்டங்கள் குறித்தான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை... மேலும் பார்க்க

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் 118 ஆய்வுக்கட்டுரைகள் சமா்ப்பிப்பு!

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய 9ஆவது மாநாட்டில் ஆய்வரங்கம், மகளிா் அரங்கம், மாா்க்க அறிஞா் அரங்கம், ஊடக அரங்கம் உள்ளிட்டவை நடைபெற்றன. இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சாா்பில்... மேலும் பார்க்க

அரசு நகரப் பேருந்திலிருந்து தவறி விழுந்த முதியவா் பலி

துறையூா் அருகே அரசு நகரப் பேருந்திலிருந்து தவறி கீழே விழுந்த முதியவா் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். முருகூா் வண்டிக்காரத் தெருவைச் சோ்ந்தவா் அ. ரெங்கராஜ் (77). இவா் பெருமாள்பா... மேலும் பார்க்க

திருச்சியில் தொழிலாளி தற்கொலை!

திருச்சி அருகே ராம்ஜி நகரில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி மாவட்டம், ராம்ஜி நகா் திண்டுக்கல் பிரதான சாலையைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன்... மேலும் பார்க்க