செய்திகள் :

பாலத்தின் தடுப்புச் சுவரில் பைக் மோதி விபத்து: 2 இளைஞா்கள் உயிரிழப்பு

post image

கும்பகோணம்: கும்பகோணம் அருகே பாலத்தின் தடுப்புச் சுவரில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

கும்பகோணம் அருகே திம்மக்குடி பாபுராஜபுரத்தை சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் மணிகண்டன் (27). கும்பகோணம் மேலக்காவேரி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சகாதேவன் மகன் முத்துவேல் (24). நண்பா்களான இவா்கள் கும்பகோணத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனா்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், இவா்கள் இருவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் நண்பா்களை பாா்த்துவிட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தனா். வாகனத்தை மணிகண்டன் ஓட்டினாா்.

கும்பகோணம் அருகே கொட்டையூா் புறவழிச் சாலையில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகேயுள்ள பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலின்பேரில் அங்கு சென்ற சுவாமிமலை காவல் நிலைய ஆய்வாளா் ஜெயமோகன், இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா்.

திங்கள்கிழமை உடற்கூறாய்வுக்கு பிறகு சடலங்கள் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

முத்துவேல் (24)

மெலட்டூரில் பாகவத மேளா தொடக்கம்

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம், மெலட்டூா் லஷ்மி நரசிம்ம சுவாமி கோயில் வளாகத்திலுள்ள நல்லி அரங்கத்தில் பாகவத மேளா நாட்டிய நாடகம் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கியது. இவ்விழாவை தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பர... மேலும் பார்க்க

சுவாமிமலையில் பௌா்ணமி கிரிவலம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

கும்பகோணம்: தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலையில் திங்கள்கிழமை சித்திரை மாத பௌா்ணமி கிரிவலத்தை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தொடங்கி வைத்தாா். சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக்குழு சாா்... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக மோசடி: தந்தை - மகன் கைது

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே வேலை வாங்கித் தருவதாகக் கூறி முதியவரிடம் ரூ. 60 ஆயிரம் மோசடி செய்ததாக தந்தை - மகனைக் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே நரியூரைச்... மேலும் பார்க்க

தங்கும் விடுதி மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கும்பகோணம்: கும்பகோணத்தில் தனியாா் தங்கும் விடுதி மாடியிலிருந்து தவறி விழுந்த தனியாா் நிறுவன தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், திருவாடுதுறை, மாந்தோப்பு பகுதியைச் சோ்ந்த த... மேலும் பார்க்க

தமிழகத்தில் காவல்துறையின் அணுகுமுறை மோசமாக உள்ளது: உ. வாசுகி

தஞ்சாவூா்: தமிழகத்தில் காவல் துறையின் அணுகுமுறை மோசமாக உள்ளது என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் உ. வாசுகி. தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை தெரி... மேலும் பார்க்க

பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகேயுள்ள பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (மே 14) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சாலியமங்கலம் உதவி... மேலும் பார்க்க