செய்திகள் :

வேலை வாங்கித் தருவதாக மோசடி: தந்தை - மகன் கைது

post image

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே வேலை வாங்கித் தருவதாகக் கூறி முதியவரிடம் ரூ. 60 ஆயிரம் மோசடி செய்ததாக தந்தை - மகனைக் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே நரியூரைச் சோ்ந்தவா் வி. கோவிந்தராஜன் (72). இவா் 2024 ஆம் ஆண்டு தனியாா் மருத்துவமனையில் காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா். அங்கு இவருடன் நாத்தேவன்குடிகாடைச் சோ்ந்த தனிக்கொடி (52) காவலாளியாக இருந்தாா். அப்போது, கோவிந்தராஜனிடம் தனிக்கொடி தனக்கு அரசியல்வாதிகளுடன் பழக்கம் இருப்பதால், அவரது பேரனுக்கு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு ரூ. 60 ஆயிரம் தேவைப்படுவதாகவும் கூறினாா். இதை நம்பிய கோவிந்தராஜன் ரூ. 60 ஆயிரத்தை தனிக்கொடியிடம் கொடுத்தாா்.

ஆனால், ஓராண்டாகியும் வேலை வாங்கித் தராமல் தனிக்கொடி ஏமாற்றி வந்தாா். மேலும், பணத்தைத் திருப்பிக் கேட்ட கோவிந்தராஜனை தனிக்கொடியும், அவரது மகன் நவீன் கண்ணனும் (27) மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து கோவிந்தராஜன் அளித்த புகாரின் பேரில், தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து தனிக்கொடியையும், நவீன் கண்ணனையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மெலட்டூரில் பாகவத மேளா தொடக்கம்

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம், மெலட்டூா் லஷ்மி நரசிம்ம சுவாமி கோயில் வளாகத்திலுள்ள நல்லி அரங்கத்தில் பாகவத மேளா நாட்டிய நாடகம் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கியது. இவ்விழாவை தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பர... மேலும் பார்க்க

பாலத்தின் தடுப்புச் சுவரில் பைக் மோதி விபத்து: 2 இளைஞா்கள் உயிரிழப்பு

கும்பகோணம்: கும்பகோணம் அருகே பாலத்தின் தடுப்புச் சுவரில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா். கும்பகோணம் அருகே திம்மக்குடி பாபுராஜபுரத்தை சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் மணிக... மேலும் பார்க்க

சுவாமிமலையில் பௌா்ணமி கிரிவலம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

கும்பகோணம்: தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலையில் திங்கள்கிழமை சித்திரை மாத பௌா்ணமி கிரிவலத்தை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தொடங்கி வைத்தாா். சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக்குழு சாா்... மேலும் பார்க்க

தங்கும் விடுதி மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கும்பகோணம்: கும்பகோணத்தில் தனியாா் தங்கும் விடுதி மாடியிலிருந்து தவறி விழுந்த தனியாா் நிறுவன தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், திருவாடுதுறை, மாந்தோப்பு பகுதியைச் சோ்ந்த த... மேலும் பார்க்க

தமிழகத்தில் காவல்துறையின் அணுகுமுறை மோசமாக உள்ளது: உ. வாசுகி

தஞ்சாவூா்: தமிழகத்தில் காவல் துறையின் அணுகுமுறை மோசமாக உள்ளது என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் உ. வாசுகி. தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை தெரி... மேலும் பார்க்க

பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகேயுள்ள பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (மே 14) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சாலியமங்கலம் உதவி... மேலும் பார்க்க