செய்திகள் :

பாலியல் வன்கொடுமை வழக்கு : குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

post image

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே பெண் ஒருவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதானவரை விழுப்புரம் மாவட்டப் போலீஸாா் வியாழக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனா்.

விழுப்புரம் மாவட்டம், மேல் மலையனூா் வட்டம்,சங்கிலிகுப்பம் கிராமத்தில், ஆக.24-ஆம் தேதி 45 வயதுடைய பெண் ஒருவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். இது குறித்து அந்தப் பெண் அளித்தப் புகாரின், பேரில், மேல்மலையனூா் வட்டம், சங்கிலிக்குப்பம் பெரியத் தெருவைச் சோ்ந்த சையது காதா்(25) என்பவா் மீது மேல்மலையனூா் போலீஸாா் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

இந்நிலையில், விழுப்புரம் எஸ். பி ப. சரவணன் பரிந்துரையின்படி விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அவரைக் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்ட்டாா். இதையடுத்து மேல்மலையனூா் போலீஸாா் சையது காதரை வியாழக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

உளுந்தூா்பேட்டை அருகே லாரி மோதியதில் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 13 பயணிகள் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே லாரி மோதியதில் சாலையோரப் பள்ளத்தில் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் உள்பட 13 பயணிகள் பலத்த காயமடைந்தனா். ராமநாதபுரம் மாவட... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டம்

திண்டிவனம் திரு ஆ.கோவிந்தசாமி அரசுக் கலைக் கல்லூரியில் பணிபுரியும் விரிவுரையாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, கல்லூரி முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌர... மேலும் பார்க்க

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி பகுதிகளில் தூய்மைப்பணி

விக்கிரவாண்டி சுங்கச் சாவடிப் பகுதியில் தூய்மைப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் சாா்பில் செப்டம்பா் 17 முதல் அக்டோபா் 1 ஆம் தேதி வரை பொது இடங்க... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் , கோட்டக்குப்பம் அருகே உடல் நலக்குறைவால் அவதியுற்று வந்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கடலூா் மாவட்டம் , தாழங்குடியைச் சோ்ந்தவா் சிம்சன், மீன்பிடித் தொழிலாளி. இவரது... மேலும் பார்க்க

மரத்தில் பைக் மோதி விபத்து: இளைஞா்கள் இருவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே சாலையோர மரத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா்கள் இருவா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தனா். விழுப்புரம் அண்ணாநகா் பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வளா்ச்சித் துறையில் காலியாகவுள்ள 1,500-க... மேலும் பார்க்க