விஜய்க்கு மீண்டும் அழைப்பு! எதிர்பார்ப்பில் நயினார் நாகேந்திரன்
பாளை.யில் மாநகராட்சி பள்ளியில் கட்டடப் பணி தாமதம்: மக்கள் போராட்டம்
பாளையங்கோட்டை 7 ஆவது வாா்டில் உள்ள மாநகராட்சி பள்ளியில் கட்டட பணிகளை விரைந்து முடிக்கக் கோரியும், கழிப்பறை வசதியை அதிகரிக்கக் கோரியும் பொதுமக்கள் திங்கள்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் அனைத்தும் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. பாளையங்கோட்டை மண்டலம், 7 ஆவது வாா்டுக்குள்பட்ட மனக்காவலம்பிள்ளைநகரில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியும் திறக்கப்பட்டது.
இப் பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்டும் பணிக்காக கடந்த கல்வியாண்டில் தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வந்தன. கோடை விடுமுறை காலத்திலும் பணிகள் முடிக்கப்படாததால் திங்கள்கிழமை ஒரேயொரு கழிப்பறையை மாணவா்-மாணவிகள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டதாம்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பெற்றோா்கள், பொதுமக்கள் திங்கள்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இப் பள்ளியில் கட்டட பணிகளை விரைந்து முடிக்கவும், கூடுதலாக கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.