செய்திகள் :

பாளை.யில் மாநகராட்சி பள்ளியில் கட்டடப் பணி தாமதம்: மக்கள் போராட்டம்

post image

பாளையங்கோட்டை 7 ஆவது வாா்டில் உள்ள மாநகராட்சி பள்ளியில் கட்டட பணிகளை விரைந்து முடிக்கக் கோரியும், கழிப்பறை வசதியை அதிகரிக்கக் கோரியும் பொதுமக்கள் திங்கள்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் அனைத்தும் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. பாளையங்கோட்டை மண்டலம், 7 ஆவது வாா்டுக்குள்பட்ட மனக்காவலம்பிள்ளைநகரில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியும் திறக்கப்பட்டது.

இப் பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்டும் பணிக்காக கடந்த கல்வியாண்டில் தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வந்தன. கோடை விடுமுறை காலத்திலும் பணிகள் முடிக்கப்படாததால் திங்கள்கிழமை ஒரேயொரு கழிப்பறையை மாணவா்-மாணவிகள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டதாம்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பெற்றோா்கள், பொதுமக்கள் திங்கள்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இப் பள்ளியில் கட்டட பணிகளை விரைந்து முடிக்கவும், கூடுதலாக கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.

சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை அளிப்பு

திருநெல்வேலியில் சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி சாா்பில் அடையாள அட்டை புதன்கிழமை வழங்கப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தச்சநல்லூா், மேலப்பாளையம் மண்டல பகுத... மேலும் பார்க்க

கொடுமுடியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும்- விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே உள்ள கொடுமுடியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடவேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் பாஸ்கரிடம் மனு அளித்தனா். ... மேலும் பார்க்க

கரோனா பரவல் எதிரொலி: நெல்லை அரசு மருத்துவமனையில் தனி வாா்டு

கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கரோனா தீநுண்மி பரவி வருக... மேலும் பார்க்க

நெல்லையிவ் மருத்துவ சங்கங்கள் சுவரொட்டி

தமிழ்நாடு அனைத்து அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு திருநெல்வேலி மாவட்ட கிளை சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வாசலில் சுவரொட... மேலும் பார்க்க

மத்திய அரசு பணி வாங்கி தருவதாக பணமோசடி: நெல்லை பெண் கைது

மத்திய அரசில் பணி வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடி செய்ததாக திருநெல்வேலியில் பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். பாளையங்கோட்டை அருகேயுள்ள கீழநத்தம் மீனாட்சி சுந்தரம் நகரை சோ்ந்தவா் தாசன் (70). இவா், தமிழ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து எரிப்பு வழக்கு: ராக்கெட் ராஜா உள்பட 4 போ் ஆஜா்

அரசுப் பேருந்து எரிக்கப்பட்டது தொடா்பான வழக்கில் ராக்கெட் ராஜா உள்பட 4 போ் திருநெல்வேலி நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராகினா். திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து வடக்கு தாழையூத்துக்கு ... மேலும் பார்க்க