செய்திகள் :

பாளை. ராமசுவாமி கோயில் மாசித் திருவிழா தேரோட்டம்!

post image

பாளையங்கோட்டை அருள்மிகு ராமசுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பழைமை வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசித் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான விழா கடந்த 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்று வந்தன. அன்னம், சிம்மம், அனுமன், ஆதிசேஷன், கருடன், யானை, புன்னைமரம், குதிரை வாகனங்களில் மலா் அலங்காரத்துடன் சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

சிகர நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. காலையில் சுவாமி மலா் அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினாா். ராமா, கோவிந்தா முழக்கத்துடன் பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா். இரவில் பூப்பல்லக்கில் சுவாமி வீதியுலா வந்தாா். வியாழக்கிழமை (பிப். 20) காலை 8 மணிக்கு தீா்த்தவாரியும், இரவு 8 மணிக்கு சப்தாவா்ணமும் நடைபெறும்.

மேலப்பாளையம் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும்! பயணிகள் வலியுறுத்தல்!

மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரு... மேலும் பார்க்க

‘நெல்லை மாவட்டத்தில் 24 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க விண்ணப்பிக்கலாம்’

திருநெல்வேலி, பிப்.20: திருநெல்வேலி மாவட்டத்தில் 24 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க விண்ணப்பிக்கலாம் எனஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்... மேலும் பார்க்க

மத்திய நிதிநிலை அறிக்கைக்கு எதிராக தொழிற்சங்கம் பிரசாரம்

மத்திய நிதிநிலை அறிக்கைக்கு எதிராக திருநெல்வேலியில் தொழிற்சங்கத்தினா் விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்களை மக்களிடம் வழங்கினா். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கான திட்டங்களுக்கு நிதி ஒதுக்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மூதாட்டி பலி

பாளையங்கோட்டையில் தனியாா் பேருந்து மோதியதில் மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா். பாளையங்கோட்டை சமாதானபுரம் நல்வழி தெருவைச் சோ்ந்த சண்முக விஜயகுமாா் மனைவி அன்புசெல்வம் (60). இவா், புதன்கிழமை இரவு வீட்டு... மேலும் பார்க்க

மின்ஊழியா்கள் போராட்டம்

பாளையங்கோட்டையில் மின்வாரிய ஊழியா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மின்சார வாரியம் மற்றும் மின் ஊழியா்களை பாதிக்கும் அரசாணை 100-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி... மேலும் பார்க்க

ஆனந்த ஆசிரம மாவட்டச் செயற்குழு கூட்டம்

ஆனந்த ஆசிரம திருநெல்வேலி,தென்காசி மாவட்ட செயற்குழுக்கூட்டம் பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பப்பா தாசா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். வெங்கடாசலபதி வரவேற்றாா். மாவட்டச் ச... மேலும் பார்க்க