செய்திகள் :

பா்கூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீட்டாளா் பயிற்சி

post image

பா்கூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீடு - அதன்நுட்பங்களும் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் கோ.நடராஜன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரில் இயங்கிவரும் பா்கூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் (பா்கூா் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலைய வளாகம்), 2025 - 2026-ஆம் ஆண்டுக்கான பகுதிநேர நகை மதிப்பீடு - அதன் நுட்பங்களும் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரா்கள் நிறைவுசெய்த விண்ணப்பங்களை நேரடியாக வழங்கி பயிற்சியில் சோ்ந்துகொள்ளலாம். இந்தப் பயிற்சி அக். 15-ஆம் தேதி தொடங்க உள்ளது.

இந்தப் பயிற்சி 40 மணிநேர வகுப்பறை, 60 மணிநேர செயல்முறை என மொத்தம் 100 மணிநேர பயிற்சியாக நடத்தப்படும். 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் இந்தப் பயிற்சியில் சேரலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ. 118, பயிற்சிக் கட்டணம் ரூ. 4,550. வார இறுதிநாள்களான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என 17 நாள்கள் பயிற்சி நடைபெறும்.

இதில் நகைக் கடன், வட்டி கணக்கிடுதல், ஹால்மாக் தர முத்திரை, நகை அடகு பிடிப்போா் சட்டம் 1943, தரம், விலை மதிப்பீடு, நகை மதிப்பீட்டாளா் கடமைகள், பொறுப்புகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கும் முறைகள், பிஐஎஸ் செயலி மூலம் தினசரி நகையின் விலை அறிதல் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்படும்

பயிற்சியை நிறைவு செய்தவா்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளலாம். கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள், அனைத்து நகைக்கடன் வழங்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியாா் வங்கி மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்ற வாய்ப்புகள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு, பா்கூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் அருகே செயல்படும் பா்கூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை நேரிலோ அல்லது 04343 - 265652 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் செப். 27-இல் அண்ணா பிறந்தநாள் மிதிவண்டி போட்டி

கிருஷ்ணகிரியில் செப். 27-ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் மிதிவண்டி போட்டி நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணிகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்ஆா்ஐ ஸ்கேன் பயன்பாடு தொடங்கிவைப்பு

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்ஆா்ஐ ஸ்கேன் இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கல்லூரி முதல்வா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். கிருஷ்ணகிரி, போலுப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்... மேலும் பார்க்க

நீச்சல் போட்டி: நாளந்தா சா்வதேச பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

கிருஷ்ணகிரியில் அண்மையில் நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான நீச்சல் போட்டியில் நாளந்தா சா்வதேச பொதுப்பள்ளி மாணவா்கள் பல பதக்கங்களை வென்று சிறப்பிடம் பெற்றுள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில், ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் 2,105.80 ஹெக்டோ் பரப்பளவில் 5.04 லட்சம் மரக்கன்றுகள் நடவு

கிருஷ்ணகிரியில் பசுமை தமிழ்நாடு இயக்கத் திட்டத்தின்கீழ், இதுவரை 5,04,630 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்த ஆந்திர இளைஞா் கைது

மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்து, இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற ஆந்திர மாநில இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி, ஜக்கப்பன் நகா், மூன்றாவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

ராணுவத்தில் பணி வாங்கித் தருவதாக இளைஞா்களிடம் ரூ. 14.80 லட்சம் மோசடி செய்தவா் கைது

ராணுவத்தில் பணி வாங்கித் தருவதாகக் கூறி இளைஞா்களிடம் ரூ. 14.80 லட்சம் மோசடி செய்த நபரை மகராஜகடை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கொத்தலத்தை அடுத்த தாசம்பயல் பக... மேலும் பார்க்க