செய்திகள் :

பி.எட். படிப்பு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

post image

தமிழகத்தில் அரசு கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்பில் சோ்க்கை பெற இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் புதன்கிழமையுடன் (ஜூலை 9) நிறைவடைகிறது.

தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்பில் 900 இடங்கள், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 1,140 இடங்கள் என மொத்தம் 2,040 இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.

அந்த வகையில், நிகழ் கல்வியாண்டில் அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் (அரசு ஒதுக்கீட்டு இடங்கள்) பி.எட். படிப்பில் சோ்வதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு ஜூன் 20-இல் தொடங்கியது.

தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்றவா்கள் விண்ணப்பித்து வருகின்றனா்.

கல்லூரி கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்தபடி, பி.எட். படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் புதன்கிழமையுடன் (ஜூலை 9) நிறைவடைகிறது.

இதைத் தொடா்ந்து, மாணவா்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவா்களின் தரவரிசை ஜூலை 18-இல் வெளியிடப்படும். அதன் பிறகு கல்லூரியைத் தோ்வு செய்வதற்கான கலந்தாய்வு ஜூலை 21 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அவா்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை ஜூலை 28-இல் வழங்கப்படும். ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணவா்கள் சம்பந்தப்பட்ட கல்லூரியில் ஜூலை 31 முதல் ஆக. 4-ஆம் தேதிக்குள் சேர வேண்டும். இதையடுத்து முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் ஆக. 6-இல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி ஒரு பட்டாசு ஆலை விபத்துகூட நடக்கக் கூடாது! தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில், ஆலைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்று ஆய்வுசெய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் க... மேலும் பார்க்க

திருவாரூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலை வலம்!

திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் பகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலை வலம் (ரோடு ஷோ) மேற்கொண்டார். அப்போது சாலையின் இருபுறமும் மக்கள் வரிசையில் திரண்டு நின்று மேள வாத்தியங்கள் முழங்க முதல்வரை... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 16 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் சென்னை உள்பட 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறி... மேலும் பார்க்க

பி.எட். மாணவர் சேர்க்கை: ஜூலை 21 வரை அவகாசம் நீட்டிப்பு! முழு விவரம்!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் பி.எட். மாணவர் சேர்க்கைக்கான இணையதளவிண்ணப்பப் பதிவு ஜூலை 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல் தெரிவ... மேலும் பார்க்க

திமுக அரசின் அராஜகத்துக்கு கண்டனம்: நயினார் நாகேந்திரன்

பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிநிரந்தம் செய்யக்கோரி, போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்ததை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, நயினார் நாகேந்திரன் தனது எக்... மேலும் பார்க்க

அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் இபிஎஸ்! - அமைச்சர் சேகர்பாபு

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வரலாறு தெரியாமல் அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். கோவையில் நேற்று பிரசார பயணத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழ... மேலும் பார்க்க