செய்திகள் :

பிகாரை குற்றத் தலைநகராக மாற்ற ஜேடியு-பாஜக முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

post image

பிகாரை நாட்டின் "குற்றத் தலைநகராக" மாற்ற ஜேடியு-பாஜக கூட்டணி அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக கார்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

பிகாரில் இரட்டை இயந்திர அரசு சட்டம் ஒழுங்கு நிலைமையை அழித்துவிட்டது. கடந்த ஆறு மாதங்களில், 8 தொழிலதிபர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 5 முறை போலீஸார் தாக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மட்டும், மூடநம்பிக்கை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டதாக அவர் கூறினார்.

பீகாரின் பூர்னியா மாவட்டத்தில் சூனியம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் மூன்று பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டு, அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜேடியு-பாஜக கூட்டணி பிகாரை நாட்டின் குற்றத் தலைநகராக மாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.

பிகாரில் வறுமை உச்சத்தில் உள்ளது. சமூக மற்றும் பொருளாதார நீதியில் நிலைமை மோசமாகிவிட்டது. சட்டம் ஒழுங்கு தேக்கமடைந்துள்ளதால், முதலீடு வெறும் காகிதத்தில் மட்டுமே உள்ளது.

இந்த முறை பிகார் பின்தங்காது, மாற்றம் நிச்சயம். இந்தியா கூட்டணி இந்த மாற்றத்தைக் கொண்டுவரும் என்று அவர் கூறினார்.

கடந்த வாரம் பாட்னாவில் உள்ள பிரபல தொழிலதிபர் கோபால் கெம்கா தனது இல்லத்திற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, எதிர்க்கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியைக் கடுமையாகத் தாக்கி வருகின்றன.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், பாஜகவும் முதல்வர் நிதிஷ் குமாரும் இணைந்து பிகாரை "இந்தியாவின் குற்றத் தலைநகராக" மாற்றியுள்ளனர் என்பதை இந்த சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது.

வரவிருக்கும் பேரவைத் தேர்தலில், அரசை மாற்றுவதற்கு மட்டுமல்ல, மாநிலத்தைக் காப்பாற்றுவதற்கும் என்று ராகும் வலியுறுத்தினார்.

ஹாஜிபூரில் தனது மகனை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்ற ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, பாட்னாவில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே இருசக்கர வாகனத்தில் வந்தவரால் கெம்கா சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Congress leader Mallikarjun Kharge accused the JDU-BJP alliance of making every effort to turn Bihar into the "crime capital" of the country.

யேமனிலுள்ள கேரள செவிலியருக்கு ஜூலை 16-இல் மரண தண்டனை நிறைவேற்றம்?

யேமன் நாட்டில் கொலை வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள கேரளத்தைச் சோ்ந்த செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதனைத்தொடர்ந்து அவரது தண்டனையை குறைக்க பல்வேறு... மேலும் பார்க்க

ஒரு ரஃபேல் தோல்வியடைந்தது; ஆனால், பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலின்போது ஒரு ரஃபேல் விமானம் தோல்வி அடைந்ததாகவும், ஆனால், அதனை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்றும் டஸால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் தெரிவி... மேலும் பார்க்க

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்தியா முடக்க உத்தரவிட்டது: எக்ஸ்

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை முடக்க இந்திய அரசு உத்தரவிட்டதாக எக்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய அரசாங்க விவகாரக் குழு தெரிவித்துள்ளது.ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளக் கணக்கு இந்தியாவில் முடக்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டியால் வரி செலுத்துவோர் விகிதம் 145% அதிகரிப்பு!

ஜிஎஸ்டியால் குஜராத்தில் வரி செலுத்துவோர் விகிதம் 145 சதவீதம் அதிகரித்துள்ளதாக அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 12.66 லட்சம் அதி... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை.யின் முன்னாள் மாணவர்கள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! ஹைதராபாத்தில் பரபரப்பு!

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பட்டுள்ளதால், அங்கு காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஹைதராபாத்தின் ஓல்ட் சிட்டி பகுதி... மேலும் பார்க்க

பேரணியில் பாலஸ்தீன கொடி அச்சிட்ட சட்டை..! 4 இளைஞர்கள் கைது!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலஸ்தீன கொடி அச்சிடப்பட்ட சட்டையை அணிந்து பேரணியில் பங்கேற்ற 4 இளைஞர்கள், அம்மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தியோரியா மாவட்டத்தில் கடந்த ஜூலை 6 ஆம் தேதி மு... மேலும் பார்க்க