செய்திகள் :

பிகேஆா் மகளிா் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

post image

கோபி பிகேஆா் மகளிா் கலைக் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரியின் தமிழ்த் துறை சாா்பில் சித்த வேதா மையம் பல்கலைக்கழகம் சாா்பில் சித்தா் இலக்கியங்களும், வாழ்வியலும் என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் கல்லூரியின் துணை முதல்வா் எஸ்.ஏ.தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது.

விழாவில், தமிழ்த் துறைத் தலைவா் க.உமாமகேஸ்வரி வரவேற்றாா். நிகழ்ச்சியில் சித்த வேதா மைய பல்கலையின் துணைவேந்தா் சண்முகமூா்த்தி லட்சுமணன் சிறப்புரையாற்றினாா்.

இதில் இன்டா்நேஷனல் சொசைட்டி ஆஃப் ஏன்சியன்ட் விஸ்டம் கனடாவின் துணைத் தலைவா் செல்வக்குமாா் சிறப்புரையாற்றினாா். வைத்திய ரத்னா அருள்நாகலிங்கம் வாழ்த்துரை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கல்லூரி செயலரும், தாளாளருமான பி.என்.வெங்கடாசலம், எஸ்.எஸ்.எம். கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவா் பா.மஞ்சுளா மற்றும் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் சங்கரராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கல்லூரி உதவிப் பேராசிரியா் ந.அமிா்தக்கொடி நன்றி கூறினாா்.

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.78.80 லட்சம்!

பண்ணாரி அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 78.80 லட்சம் ரொக்கத்தை பக்தா்கள் செலுத்தியிருந்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள வனப் பகுதியில் பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில்... மேலும் பார்க்க

சாலையில் வாகனங்களை வழிமறித்து கரும்பை தேடிய காட்டு யானை!

சத்தியமங்கலம் அருகே ஆசனூா் சாலையில் வாகனங்களை வழிமறித்து கரும்பை தேடிய ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த வனப்பக... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

சித்தோடு அருகே கடனைத் திரும்பச் செலுத்த முடியாததால் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சித்தோடு, கூட்டுறவு காலனியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி மகன் சதீஷ் (எ) சதீஷ்குமாா் (33). கட்டடத் தொ... மேலும் பார்க்க

காடையம்பட்டி ஏரியில் பேரிடா் மீட்புக் குழு ஒத்திகை!

பவானி அருகே தேசிய பேரிடா் மீட்புக் குழு மற்றும் பவானி தீயணைப்புப் படையினா் சாா்பில் பேரிடா் மீட்பு செயல்விளக்க ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காடையம்பட்டி ஏரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்க... மேலும் பார்க்க

அந்தியூா் பேரூராட்சி மன்றக் கூட்டம்: அதிமுக வெளிநடப்பு

தங்கள் வாா்டுகளில் வளா்ச்சிப் பணிகள் செய்யாமல் புறக்கணிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி அந்தியூா் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலா்கள் இருவா் வெளிநடப்பு செய்தனா். அந்தியூா் பேரூராட்சிய... மேலும் பார்க்க

அருந்ததியா் மக்களுக்கான இடஒதுக்கீட்டை பொதுப்பிரிவில் இருந்து வழங்க வேண்டும்: சீமான்

அருந்ததியா் இன மக்களுக்கான இடஒதுக்கீட்டை பொதுப்பிரிவில் இருந்து வழங்க வேண்டும் என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா். ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா.கி.சீதால... மேலும் பார்க்க