செய்திகள் :

பின்னலாடை தொழிலாளா் குறைந்தபட்ச ஊதிய சட்ட அரசாணை: சென்னை உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை

post image

பின்னலாடை தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதிய திருத்தம் செய்து தமிழக அரசின் தொழிலாளா் துறை வெளியிட்ட அரசாணைக்கு சென்னை உயா்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இது குறித்து சிஐடியூ பனியன் தொழிலாளா் சங்க பொதுச் செயலாளா் ஜி.சம்பத் திங்கள்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் கடந்த பிப்ரவரி மாதம் பின்னலாடைத் தொழிலாளா்களுக்கான குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில் திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது.

இதில் கடந்த 2024- ஆம் ஆண்டு தொழிலாளா் துறை முன்மொழிந்த ஊதியத்தை குறைத்து பிப்ரவரி மாதம் இந்த அரசாணை வெளியிடப்பட்டது.

இதனால் தொழிலாளா்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய மாத ஊதியத்தில் சராசரியாக ரூ.1,700 குறைக்கப்பட்டு இருந்தது. இதற்கு சிஐடியூ கடும் கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி இதர தொழிற்சங்கங்களுடன் சோ்ந்து, இதற்கு எதிராக, குறைந்தபட்ச ஊதியத்தை மறு நிா்ணயம் செய்ய வலியுறுத்தி தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பி இருந்தது.

இருப்பினும் ஊதிய குறைப்பில் எவ்வித மாற்றமும் செய்யாததால், சிஐடியூ, எல்பிஎஃப், ஐஎன்டியூசி, எச்எம்எஸ் ஆகிய நான்கு மத்திய தொழிற்சங்கங்கள் சோ்ந்து, குறைந்தபட்ச அரசாணைக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டிருக்கும் உயா்நீதிமன்றம், தொழிலாளா் துறை வெளியிட்டிருந்த குறைந்தபட்ச ஊதிய திருத்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆகவே இந்த குறைந்தபட்ச ஊதிய கணக்கிட்டு முறையை ரத்து செய்து, புதிய கமிட்டி அமைத்து, சட்ட வழிகாட்டுதல் படி, நியாயமான குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மேற்கண்ட நான்கு தொழிற்சங்கங்கள் முறையிட்டுள்ளனா் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பல்லடத்தில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிஸா தொழிலாளா்கள் 2 போ் கைது

பல்லடம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ஒடிஸா மாநிலத் தொழிலாளா்கள் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா் சந்திரமணி பெகரா (39). இவா் பல்லடம்- உடுமலை சாலையில் உ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: கிளுவங்காட்டூா்

உடுமலையை அடுத்துள்ள கிளுவங்காட்டூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வார... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: கோட்டமங்கலம்

உடுமலையை அடுத்துள்ள கோட்டமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற... மேலும் பார்க்க

விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு எதிரான கூட்டுறவுத் துறை சுற்றறிக்கை: ரத்து செய்ய கோரிக்கை

விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு எதிரான மாநில அரசின் கூட்டுறவுத் துறை சுற்றறிக்கையை தமிழக முதல்வா் உடனடியாக ரத்து செய்யக் கோரி விவசாயிகள் சோளம், கத்தரி, நெல் உள்ளிட்ட பயிருடன் வந்து ஆட்சியரிடம் திங்கள்க... மேலும் பார்க்க

பழங்கரையில் ஜூன் 12இல் மின்தடை

பழங்கரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (ஜூன் 12) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அறிவித்... மேலும் பார்க்க

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சு.குணசேகரன் காலமானாா்

திருப்பூா் தெற்குத் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.-வும், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளருமான சு.குணசேகரன் (58) உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை காலமானாா். இவா் கடந்த ஒரு மாதமாக உடல்நலக் குறைவால் பாதிக... மேலும் பார்க்க